6 புதிய டிரக் மாடல்களை களமிறக்கும் பாரத் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் தாய் நிறுவனமான டெய்ம்லர் டிரக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் பாரத் பென்ஸ் என்ற பிரத்யேக பிராண்டில் டிரக்குகளை தயாரிக்க உள்ளது.
இதற்காக, சென்னை அருகே ரூ.4,400 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை கட்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டது. ஆனால், உற்பத்தி இன்னும் துவங்கவில்லை.
இந்த நிலையில், இந்த ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் செப்டம்பரில் 6 புதிய டிரக் மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல இழுதிறன் கொண்ட மாடல்களில் வருவதால் நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாரத் பென்ஸ் உயரதிகாரி விஆர்வி பிரசாத் கூறுகையில்," வரும் செப்டம்பரில் 6 புதிய டிரக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவை 25 டன் இழுதிறன் கொண்டதாக இருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








