தமிழக ஆலைகளில் புதிதாக 1,200 பேருக்கு வேலை: ஜெயலலிதாவிடம் ஃபோர்டு உறுதி

ஃபோர்டு நிறுவனம் புதிதாக ஈக்கோஸ்போர்ட் என்ற எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த எஸ்யூவி தயாரிப்புக்கான புதிய உற்பத்தி பிரிவை ஃபோர்டு அமைத்து வருகிறது. இந்த புதிய உற்பத்தி பிரிவை துவங்கி வைக்க வருமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஃபோர்டு அதிகாரிகள் நேரில் அழைப்பு விடுத்தனர்.
அப்போது, அடுத்த ஓர் ஆண்டில் சென்னை ஆலை மற்றும் கோயம்புத்தூர் மையங்களில் புதிதாக 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைவர் ஜோ ஹின்ரிச் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழக தொழிற்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் மற்றும் ஃபோர்டு அதிகாரிகள் உடனிருந்தனர்.


Click it and Unblock the Notifications








