இந்திய கார் மார்க்கெட் மந்தம்: ஃபோர்டு தலைவர் கவலை!

அமெரிக்காவில், வாஷிங்டன் நகரில் நடந்த அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் ஃபோர்டு நிறுவனத் தலைவர் ஆலன் முலலி கவுரவிக்கப்பட்டார்.அப்போது பேசிய அவர் கூறியதாவது,
உலக அளவில் இந்தியாவை எங்களுக்கு மிக முக்கியமான மார்க்கெட்டாக கருதுகிறோம். ஆனால், இந்தியாவில் தற்போது கார் விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தமான போக்கு கவலை அளிக்கிறது.
இருப்பினும், அடுத்த 5 ஆண்டுகளில் 8 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளோம். இந்தியாவில் பெரிய அளவில் வர்த்தக விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை ஆலைக்காக இதுவரை ரூ.5,000 கோடி முதலீடு செய்துள்ளோம்.
இதேபோன்று, குஜராத்தில் கட்டப்பட உள்ள புதிய ஆலைக்காக புதிதாக ரூ.5,000 கோடியை முதலீடு செய்ய உள்ளோம். இதன்மூலம், 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








