கார்களின் விலையை ரூ.15,000 வரை உயர்த்திய ஜிஎம்

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் செவர்லே பிராண்டில் இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் கார் விலையை உயர்த்த இருப்பதாக கடந்த மாதமே ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்து விட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது முறைப்படி கார் விலையை உயர்த்துவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
தனது கார் மாடல்களின் விலையையும் 0.5 சதவீதம் முதல் 1.75 சதவீதம் வரை உயர்த்துவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனால், செவர்லே கார்களின் விலையை ரூ.3,000 முதல் அதிகபட்சம் ரூ.15,000 உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








