ரூ.15,999 மாதத் தவணை கட்டினால் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், பென்ஸ், ஆடி உள்ளிட்ட பங்காளி நிறுவனங்களால் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி இருக்கிறது.
இதையடுத்து, வாடிக்கையாளர்களை வளைக்க பல்வேறு யுக்திகளை பிஎம்டபிள்யூ கையாண்டு வருகிறது. இந்த நிலையில், ரூ.15,999 மாதத் தவணை கட்டினால் போதும், தனது எக்ஸ்1 எஸ்யூவியை ஓட்டிச்செல்லலாம் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
ரூ.22 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எஸ்யூவிக்கு மிகக்குறைந்த மாதத் தவணையுடன் கூடிய கடன் திட்டத்தை பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கடன் திட்டத்தின்படி, எக்ஸ்1 எஸ்யூவிக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள் வரும் மார்ச் 31ந் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
(பிஎம்டபிள்யூ கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்க)


Click it and Unblock the Notifications









