உதவாக்கரைகளை தூக்கிவிட்டு புதிய சிறிய கார்கள்: ஹோண்டா அதிரடி முடிவு

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இந்திய கூட்டாளியாக இருந்த சியல் உறவை சமீபத்தில் வெட்டி விட்டது. இதையடுத்து, தனது விற்பனை யுக்திகளை வெகுவாக மாற்றி வருகிறது.
செடான் கார்களின் விற்பனை அந்த நிறுவனத்துக்கு எதிர்பார்த்த பங்களிப்பை கொடுக்கவில்லை. எனவே, சிவிக், அக்கார்டு உள்ளிட்ட செடான் கார்களை இந்திய மார்க்கெட்டிலிருந்து தூக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு மாற்றாக அதிக அளவில் சிறிய கார்களை தனது போர்ட்போலியோவில் சேர்த்துக் கொள்ளவும் முடிவெடுத்துள்ளது. தவிர, காம்பெக்ட் ரகத்தில் எம்பிவி கார் மாடலையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிரியோ காருக்கு கிடைத்துள்ள நல்ல வரவேற்பு, ஹோண்டாவை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது. இதுகுறித்து ஜப்பானிய வர்த்தக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. புதிய சிறிய கார் மாடல்களின் வரவால் நிச்சயம் தனது விற்பனையை அதிகரித்துக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








