ஹோண்டா சியல் கார் நிறுவனத்தின் பெயர் மாற்றம்: ஹோண்டா கார்ஸ் ஆனது

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா இந்தியாவில் ஸ்ரீராம் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வந்த சியல் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டில் அதிக அளவில் விரிவாக்கப் பணிகளை ஹோண்டா செய்ய உள்ளது. இதற்காக, அதிக முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், ஹோண்டாவின் கூட்டணி நிறுவனமான சியல் நிறுவனத்துக்கு புதிய முதலீடு செய்ய இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, ஹோண்டா சியல் கூட்டு நிறுவனத்தில் சியலுக்கு இருந்த ரூ.180 கோடி மதிப்புடைய 3.16 சதவீத பங்குகளை கடந்த மாதம் ஹோண்டா வாங்கியது.
இதையடுத்து, இந்தியாவில் தனியாக ஹோண்டா கார் நிறுவனம் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளது. டெல்லியில் உள்ள நிறுவனங்களுக்கான பெயர் பதிவு அலுவலகத்தில் ஹோண்டா கார் நிறுவனம் முறையாக புதிய பெயரை பதிவு செய்தது.
இதையடுத்து, ஹோண்டா சியல் நிறுவனத்தின் பெயர் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








