நவ 1ந் தேதி முதல் கார் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்

ரூபாய் மதிப்பில் நிலவும் ஏற்ற இறக்கம், உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்த மாத துவக்கத்தில் மாருதி, ஹோண்டா, ரெனோ, ஆடி உள்ளிட்ட கார் நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தின.
வரும் 1ந் தேதி முதல் நிசானும் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20 என பாரபட்சம் இல்லாமல் அனைத்து கார்களின் விலையையும் ரூ.5,000 வரை உயர்த்த இருப்பதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. நாளை மறுதினம் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
இதுகுறி்த்து மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்," உற்பத்தி செலவீனம் கூடியுள்ளதால் விலை உயர்வை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு அதிக சிரமத்தை கொடுக்காத வகையில் விலையை உயர்த்துகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications