விற்பனை மந்தம்: செய்வதறியாது திகைத்து நிற்கும் ஹூண்டாய்!

நடப்பு ஆண்டில் பெரும் விற்பனை இலக்கை நிர்ணயித்திருந்தது ஹூண்டாய். ஆனால், தற்போதைய மார்க்கெட் நிலவரம் இலக்கை நிச்சயமாக எட்ட முடியாது என்று அந்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் உயரதிகாரி அர்விந்த் சக்சேனா கூறுகையில்,"பெட்ரோல் விலை, கார் கடன் வட்டி வீதம், பண வீக்கம் என பல காரணங்களால் கார் விற்பனையில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பண்டிகை காலத்தில் கார் விற்பனை மீண்டும் எழுச்சி பெறும் என்று நம்புகிறோம். எனவே, நடப்பு ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 7 சதவீத விற்பனை வளர்ச்சியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








