விரைவில் வருகிறது மஹிந்திரா குவான்ட்டோ
5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட புதிய ஸைலோ மாடலை மஹிந்திரா வடிவமைத்துள்ளது. மினி ஸைலோ என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த புதிய காருக்கு தற்போது குவான்ட்டோ என்ற பெயரை மஹிந்திரா சூட்டியிருக்கிறது.
இந்த நிலையில், குவான்ட்டோவை வரும் செப்டம்பர் மத்தியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ரூ.5 லட்சம் ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த எஞ்சின் அதிக மைலேஜ் தரும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. மேலும், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்களுடன் இந்த புதிய கார் மஹி்ந்திராவின் மார்க்கெட் பங்களிப்பை நிச்சயம் கூட்டும் என ஆட்டோமொபைல் துறையினரும் கட்டியம் கூறுகி்ன்றனர்.
Image source: Autocarindia


Click it and Unblock the Notifications









