மஹிந்திராவின் புதிய எஸ்யூவிக்கு இன்று முதல் மீண்டும் புக்கிங்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்ப்பட்ட தனது புத்தம் புதிய எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்யப்பட்டு 10 நாளில் மட்டும் 8,000 எக்ஸ்யூவி புக்கிங் செய்யப்பட்டது.
உற்பத்தி நெருக்கடி ஏற்பட்டதால் புக்கிங்கை மஹிந்திரா திடீரென நிறுத்திவிட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக மஹிந்திரா எஸ்யூவிக்கு இன்று முதல் மீண்டும் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது.
இதில், 7,200 புக்கிங்குகளை மட்டும் பெற்றுக்கொள்ள மஹிந்திரா முடிவு செய்துள்ளது. மேலும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சென்னை, கோவை உள்ளிட்ட நாடு முழுவதும் 19 நகரங்களில் புதிய எக்ஸ்யூவிக்கான புக்கிங்கை மஹிந்திரா துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








