புதிய ஆல்ட்டோவுக்கு 6,500 பேர் புக்கிங் பண்ணிட்டாங்க... அப்ப நீங்க?

நாட்டின் அதிகம் விற்பனையாகும் குட்டிக் காராக மாருதியின் ஆல்ட்டோ திகழ்கிறது. இந்த நிலையில், சந்தை போட்டி, வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கருத்தில்க்கொண்டு புத்தம் புதிய வடிவமைப்புடன் கூடிய புதிய ஆல்ட்டோ காரை வரும் செவ்வாய்க் கிழமை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தநிலையில், புதிய ஆல்ட்டோ காருக்கு இந்த மாத துவக்கத்தில் முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.5,000 முன்பணம் பெற்றுக்கொண்டு புக்கிங் நடந்து வருகிறது. நிறைந்த அம்சங்களுடன் ரூ.3 லட்சம் ஆன்ரோடு விலையில் வரலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் புதிய ஆல்ட்டோ காருக்கு ஆர்வமுடன் புக்கிங் செய்து வருகின்றனர்.
இதுவரை 6,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், இன்னும் இரு தினங்களில் புதிய ஆல்ட்டோ காருக்கான புக்கிங் 10,000 எட்டிவிடும் என மாருதி நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








