தொடரும் ஆல்ட்டோ ஆரவாரம்: இதுவரை 32,000 பேர் முன்பதிவு

ஆல்ட்டோ 800
புதிய ஆல்ட்டோவுக்கு இதுவரை 32,000 பேர் முன்பதிவு செய்து இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மத்தியில் ரூ.2.44 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி அறிமுகம் செய்தது.பழைய ஆல்ட்டோ 800 சிசி காரை விட அதிக வசதிகள், கேபினில் கூடுதல் இடவசதிகளுடன் வந்த புதிய ஆல்ட்டோ வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த காலாண்டில் வருவாயில் சரிவு ஏற்பட்டதால் சிறிது சோர்ந்து போன மாருதிக்கு புதிய ஆல்ட்டோ அறிமுகம் புதுத் தெம்பை கொடுத்துள்ளது. இதுவரை இந்த புதிய காருக்கு 32,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. இதனால், எதிர்பார்த்தபடியே விற்பனையில் நிச்சயம் ஒரு பெரிய பங்களிப்பை புதிய ஆல்ட்டோ தருவது உறுதியாகியிருக்கிறது.

அதிக மைலேஜ், போதுமான வசதிகள், குறைந்த விலை என அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற காராக இருப்பதுதால் ஆல்ட்டோ வெற்றி தொடரும் என மாருதி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
India's largets car maker Maruti has bagged 32,000 bookings for new Alto 800 within short period. The company has aimed the Alto 800 at becoming the largest selling car model in India, just like the outgoing Alto F8D did.
Story first published: Friday, November 2, 2012, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X