ஒரே நாளில் 200 புதிய ஆல்ட்டோ கார்கள் டெலிவிரி!

நம் நாட்டு சரித்திரத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 200 கார்கள் டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும், மாருதி சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய ஆல்ட்டோ கார்கள்தான் இவ்வாறு டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளன.

ஆல்ட்டோ 800

கேரள மாநிலம், கோழிக்கோட்டிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள கோட்டக்குன்னு என்ற இடத்தில் மாருதியின் அங்கீகாரம் பெற்ற டீலர் உள்ளது. இந்த டீலரில்தான் இதுபோன்று முன்பதிவு செய்த 200 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் புதிய ஆல்ட்டோ 800 கார்களை நேற்று டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக, விழா ஒன்றிற்கும் அந்த டீலர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில், கேரள தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிகே.குன்ஹலிகுட்டி புதிய ஆல்ட்டோ 800 கார்களின் சாவியை உரிமையாளர்களிடம் நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், ஒரே நேரத்தில் 200 புதிய ஆல்ட்டோ 800 கார்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது உரிமையாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களையும் பரவசப்படுத்தியது.

Article Published On: Saturday, October 20, 2012, 11:26 [IST]
English summary
Two hundred Alto 800 cars were delivered to customers by Maruti Suzuki dealer at Malappuram yesterday. This is the first time in India when so many cars are being delivered to 200 customers at the same time.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+