பட்ஜெட் 'எஃபெக்ட்': கார் விலையை உடனடியாக உயர்த்தும் மாருதி

மத்திய பட்ஜெட்டில் கார்களின் மீதான வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து ரக கார்களின் விலையும் உயர்கிறது. அனைத்து நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்வை அடுத்தடுத்து அறிவிக்க ஆயத்தமாகி வருகின்றன.
நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி கார்களின் விலையை உடனடியாக உயர்த்த முடிவு செய்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு சதவீதம் விலையை உயர்த்துவது என்பது குறித்து அதன் நிர்வாகம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
இன்றே கார்களின் விலையை மாருதி உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, டொயோட்டோ உள்ளிட்ட அனைத்து கார் நிறுவனங்களும் கார் விலை உயர்வு குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








