ரூ.4,000 கோடியில் புதிய கார் ஆலை: குஜராத் அரசுடன் மாருதி ஒப்பந்தம்

நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனம் டெல்லி அருகே குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் ஆலைகளை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.
எதிர்கால தேவையை கருத்தில்க்கொண்டும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும் குஜராத்தில் புதிய கார் ஆலையை கட்ட மாருதி முடிவு செய்தது. இதற்காக, குஜராத் அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை மாருதி மேற்கொண்டது.
இதில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால், குஜராத் அரசுக்கும் மாருதி நிறுவனத்துக்கும் இடையே தற்போது ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அகமதாபாத்திலிருந்து 100கிமீ தொலைவில் உள்ள ஹன்சால்பூர் என்ற இடத்தில் புதிய கார் ஆலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
700 ஏக்கரில் அமைய இருக்கும் இந்த பிரம்மாண்ட தொழிற்சாலைக்காக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும்.


Click it and Unblock the Notifications