எர்டிகா விலையை ரூ.20,000 வரை உயர்த்த மாருதி திட்டம்

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாருதி எர்டிகா வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 40,000 எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில், எர்டிகாவின் விலையை உயர்த்த மாருதி திட்டமிட்டுள்ளது.
அடுத்த மாத இறுதியில் எர்டிகாவின் விலை உயர்வை அறிவிக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டீசல் எர்டிகாவின் விலை மட்டுமே உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், பெட்ரோல் மாடலின் விலையை ரூ.10,000 வரையிலும், டீசல் மாடலின் விலையை ரூ.20,000 வரையிலும் உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








