வரும் ஜனவரியிலிருந்து புதிய ஆல்ட்டோ 800 ஏற்றுமதி: மாருதி

நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக ஆல்ட்டோ இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆல்ட்டோவின் விற்பனையை தக்க வைக்கும் விதத்தில் புதிய மாடலை மாருதி நேற்று அறிமுகப்படுத்தியது.
மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆல்ட்டோ நிச்சயம் போட்டியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆல்ட்டோ 800 காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. வரும் ஜனவரியில் முதல் பேட்ஜ் ஆல்ட்டோ 800 கார்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பது உள்ளிட்ட விபரங்களை அந்த நிறுவனம் உடனடியாக வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








