குர்கான் ஆலையிலும் டிசையர் உற்பத்தி: காத்திருப்பு காலம் குறையும்

மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் மானேசர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழிலாளர் பிரச்னையால் தற்போது மானேசர் ஆலையில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுவிட்டாலும், இயல்பு நிலையை எட்டவில்லை.
இந்த நிலையில், டிசையர் காருக்கு மட்டும் 65,000 பேர் புக்கிங் செய்து காத்திருக்கின்றனர். இதையடுத்து, புக்கிங் சுமையை குறைக்கும் விதத்தில் மானேசர் ஆலை தவிர்த்து குர்கான் ஆலையிலும் டிசையர் கார் உற்பத்தியை துவங்கியிருக்கிறது மாருதி. இந்த காருக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருந்து வந்தது.
குர்கான் ஆலையிலும் உற்பத்தி துவங்கப்பட்டிருப்பதால் அடுத்த 4 மாதங்களில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு டிசையர் கார் டெலிவிரி கொடுத்து விட முடியும் என மாருதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, டிசையர் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களு்ககும் இது இனிப்பான செய்தியாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications