அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்

கடந்த 2010ம் ஆண்டு மைக்ரா ஹேட்ச்பேக் காரை இந்திய மார்க்கெட்டில் நிசான் அறிமுகம் செய்தது. இதனால், ஓரளவு அறிமுகம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு சன்னி செடான் காரை களமிறக்கியது. சன்னி நிசானுக்கு புதிய முகவரியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. தவிர, வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
அடுத்ததாக, விரைவில் எவாலியா எம்பிவி காரை நிசான் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் மைக்ராவைவிட குறைந்த விலை காரை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ தகயுகி இசிதாவிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்," இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளோம். அனைத்து ரகங்களிலும் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இதில், மைக்ராவைவிட குறைந்த விலை காரும் அடக்கம். ஆனால், அதற்கு முன்பாக மார்க்கெட் நிலவரம், வாடிக்கையாளர் தேவைகள், எதிர்பார்ப்புகளை அறிந்துகொண்ட பின்னரே விற்பனைக்கு கொண்டு வருவோம்.
மேலும், புதிய கார் மாடல்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்வதற்கு ஏதுவாக டீலர் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உள்ளோம். தற்போது 74 ஆக உள்ள டீலர் எண்ணிக்கையை நடப்பு நிதி ஆண்டிற்குள் 100ஆக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








