கார்கள் மீது பல்க் வரி: தலையில் இடியை இறக்கிய மராட்டிய அரசு
கார்கள் மீது 4 சதவீதம் வரை கூடுதலான வரியை மஹாராஷ்டிர அரசு விதித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரியை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதனால், கார்களின் விலை ரூ.5000 முதல் ரூ.3,00,000 வரை அதிகரித்துள்ளது.
இந்த அதிர்ச்சியிலிருந்து வாடிக்கையாளர்கள் இன்னும் மீளாத நிலையில், மராட்டிய அரசு மற்றொரு இடியை கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர் தலையில் இறக்கியுள்ளது.
ஆம், கார்கள் மீது 4 சதவீதம் வரை கூடுதல் வரியை விதிக்க உள்ளது மராட்டிய அரசு. இது அம்மாநில வாடிக்கையாளர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் கார்கள் மீது 2 சதவீத கூடுதல் வரியும், டீசல் கார்கள் மீது 4 சதவீதம் வரையும் உயர்த்த உள்ளது மராட்டிய அரசு. அதேவேளை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிஎன்ஜி என்று கூறப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களுக்கு வரிச் சலுகை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications








