ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: கார் கடனுக்கான வட்டி குறையும்

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வங்கிகளுக்கு கடன் தரும் வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. பண வீக்கத்தை சரிசெய்யும் நடவடிக்கையாக இந்த அதிரடி அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதனால், வீடு, வாகன கடன்களுக்கு எகிறிய வட்டி வீதம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி உயர்வால் கடந்த ஆண்டு கார் விற்பனையில் பெரிய தொய்வு ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் கார் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்பதால், மீண்டும் கார் விற்பனை வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கான வழி வகை ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறி்விப்பு கார் நிறுவனங்கள் மற்றும் கார் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருக்கும் இனிப்பான செய்தியாக வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








