லோகோ பிளேட்டை இலவசமாக மாற்றித் தரும் ஸ்கோடா

சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் கார் நிறுவனங்களின் சின்னங்கள் பொறித்த லோகோ பிளேட் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கார் உரிமையாளர்களுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கார்களில் பொருத்தப்படும் லோகோ பிளேட்டுகள் விலை அதிகம் என்பதுடன், ஆர்டர் செய்துதான் பெற முடியும் என்பதால் காலதாமதமும் ஏற்படும்.
குறிப்பாக, ஆடி, போக்ஸ்வேகன், ஸ்கோடா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களின் லோகோ பிளேட்டுகள் அதிக அளவில் திருடப்படுகின்றன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, லோகோ பிளேட்டுகள் திருடப்பட்டால் அதை இலவசமாக மாற்றித் தருவதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.
இது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது. மேலும், பிற நிறுவனங்களும் இதை பின்பற்றி லோகோ பிளேட்டுகளை மாற்றித் தர வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








