ஆக்டாவியா செடானை மீண்டும் அறிமுகப்படுத்த ஸ்கோடா திட்டம்

மாசுக்கட்டுப்பாடு பிரச்னையால் இந்தியாவில் ஆக்டாவியா காரின் உற்பத்தியை ஸ்கோடா ஆட்டோ நிறுத்திவிட்டது. இந்த நிலையில், மீண்டும் ஆக்டாவியா பெயரில் புதிய செடான் காரை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது தாய் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி., பிளாட்பார்மில் புதிய ஆக்டாவியா காரை வடிவமைக்கவும் ஸ்கோடா முடிவு செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய ஆக்டாவியா செடான் கார் பார்வைக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் லாரா கார்களின் பெயருக்கு மாற்றாக புதிய ஆக்டாவியா பிராண்டை இந்தியாவில் பயன்படுத்தவும் ஸ்கோடா ஆட்டோவின் இந்திய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








