புதிய ஷோரூம் அமைக்கும் டீலர்களுக்கு கமிஷனை கணிசமாக உயர்த்தி தரும் ஃபியட்

இந்திய மார்க்கெட்டில் டாடாவுடன் கூட்டணி அமைத்து கார் உற்பத்தி மற்றும் விற்பனையை கவனித்து வருகிறது இத்தாலி நிறுவனமான ஃபியட்.
டாடா ஆலையில் கார் உற்பத்தியும், டாடா ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு கைமாறாக ஃபியட் நிறுவனத்தின் டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் பெற்று வருகிறது.
இந்த டீசல் எஞ்சின்கள் இண்டிகா வரிசை கார்களில் பொருத்தப்படுகின்றன. இந்த நிலையில், முந்தாநாள் வந்த கார் நிறுவனங்கள் விற்பனையில் அதீத வளர்ச்சி கண்டு நிலையில், ஃபியட் கார் விற்பனை மிகவும் பின்தங்கி இருக்கிறது.
மேலும், டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே கார் விற்பனை செய்யப்படுவதால், தனது கார் விற்பனைக்கு டீலர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஃபியட் கருதுகிறது.
எனவே, டாடா ஷோரூம்களில் கார் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு, தனியாக ஷோரூம்களை திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது. இதற்காக, டாடா டீலர்களுக்கு அந்த நிறுவனம் வலை விரித்துள்ளது.
டெல்லியில் திறக்கப்பட்டுள்ளதைபோல் நாடு முழுவதும் புதிதாக 20 காபி கஃபேக்களை திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது. இதற்காக டாடா டீலர்களுக்கு அந்த நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
புதிய காபி கஃபே திறக்கும் டீலர்களுக்கு கார்களுக்கான கமிஷனை 5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதம் தருவதாக அந்த நிறுவனம் ஆசை வார்த்தை காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications








