கார்கள் விலையை ரூ.35,000 வரை உயர்த்திய டாடா மோட்டார்ஸ்

பட்ஜெட்டில் கார்கள் மீதான கலால் வரி 2 முதல் 5 சதவீதம் உயர்த்தப்பட்டதையடுத்து, கார்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. டொயோட்டோ விலை உயர்த்திய நிலையில், டாடா மோட்டார்சும் கார்களின் விலையை அதிகபட்சம் ரூ.35,000 வரை உயர்த்தியுள்ளது.
நானோ, இன்டிகா, இன்டிகோ ஆகிய சிறிய ரக கார்களின் விலை ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சஃபாரி, ஆரியா, சுமோ ஆகிய கார்களின் விலை ரூ.8,000 முதல் ரூ.35,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நானோ காரை டாடா மோட்டார்ஸ் உயர்த்தாமல் இருந்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்தபோது கூட நானோ காரின் விலையை டாடா உயர்த்தவில்லை. ஆனால், பட்ஜெட்டில் வரி உயர்வு காரணமாக நானோவின் விலையை டாடா உயர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








