அடுத்த ஆண்டு ஏப்ரலில் டீசல் நானோ கார்: டாடா திட்டம்?

ஆட்டோமொபைல் துறையினர் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் டீசல் நானோ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லிட்டருக்கு 30 கிமீக்கு மேல் மைலேஜ் தரும் என்பதே காரணம்.
டீசல் நானோவுக்கான எஞ்சினை பிரபல ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பாஷ் உருவாக்கி வருகிறது. ஆனால், டீசல் நானோ குறித்து டாடா மோட்டார்ஸ் இதுவரை எந்தவொரு தகவலையும் உறுதிப்படு்த்த வில்லை.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் டீசல் நானோ காரை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டீசல் நானோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 800 சிசி எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டீசல் நானோ வருவதற்கு முன்பு இயற்கை எரிவாயுவில்(சிஎன்ஜி) இயங்கும் நானோ காரை விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே சிஎன்ஜி நானோ மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications