ஜாகுவார் பிராண்டில் குறைந்த விலை கார்களை தயாரிக்க டாடா திட்டம்

நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனங்களான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் தற்போது டாடா வசம் இருக்கிறது. மேலும், இந்த நிறுவனங்களுக்கும் அதிக அளவில் டாடா முதலீடு செய்து வருகிறது. இதனால், இரு நிறுவனங்களும் தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன.
இந்த நிலையில், ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் மார்க்கெட்டை வலுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை டாடா மேற்கொண்டுள்ளது. இதற்காக, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில் குறைந்த விலை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய மார்க்கெட்டிலும் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் பிராண்டுகளில் குறைந்த விலை கார்களை அறிமுகப்படுத்தினால் நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதாகவும் டாடா கருதுகிறது. தவிர, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களை இங்கு அசெம்பிளிங் செய்யும் வாய்ப்புகள் டாடாவிடம் உள்ளதால் பிற சொகுசு கார் தயாரிப்பாளர்களுக்கு எளிதில் போட்டியை கொடுக்க முடியும்.
அதேவேளை, மிகக்குறைந்த விலை சொகுசு கார்களை தயாரிக்கும் எண்ணம் இல்லை என்றும் ரத்தன் டாடா விளக்கமாக தெரிவித்துள்ளார். பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காருக்கு போட்டியை கொடுக்கும் வகையில் ஜாகுவார் பிராண்டில் கார்களை களமிறக்க டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








