பாதுகாப்பு துறை எக்ஸ்போவில் கவச வாகனங்களை வரிசைகட்டிய டாடா

டெல்லி, பிரகதி மைதானத்தில் பாதுகாப்பு துறைக்கான கவச வாகனங்களின் ஆட்டோ எக்ஸ்போ நடந்து வருகிறது. இதில், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன.
இதில், டாடா மோட்டார்ஸ் வைத்துள்ள எம்பிபிவி என்ற புல்லட் ப்ரூம் வசதி கொண்ட கவச வாகனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களி்ன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய கவசம் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதுதவிர, ஏவுகணை பொருத்தப்பட்ட டாடா பரிகார் மிசைல் கேரியர் வாகனமும் பார்வைக்குக்கு வைக்கப்பட்டுள்ளது. இலகு ரக கவச வாகனம், மொபைல் பங்கர் உள்ளிட்ட ஏராளமான புதிய மாடல் கவச வாகனங்களை ஆட்டோ எக்ஸ்போவில் வரிசை கட்டி வியப்பில் ஆழ்த்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.
இதுதவிர, எதிர்காலத்துக்கு தேவையான தொழி்ல்நுட்பத்துடன் கூடிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் இதர பாதுகாப்பு கருவிகளையும் டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








