பாதுகாப்பு துறை பயன்பாடுக்கான புதிய சஃபாரி: டாடா அறிமுகம்

அடுத்த தலைமுறை அம்சங்களுடன் புதிய சஃபாரி எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடந்து வரும் பாதுகாப்பு துறைக்கான ஆட்டோ கண்காட்சியில் ஹெவி டியூட்டி பாடி கொண்ட புதிய சஃபாரியை டாடா பார்வைக்கு வைத்திருக்கிறது.
இந்த புதிய 4 வீல் டிரைவ் கொண்டது என்பதால் சஃபாரி எந்தொரு சாலை நிலையிலும் தடையில்லாமல் செல்லும் திறன் கொண்டது. கரடுமுரடான சாலையில் சென்றாலும் சிறப்பாக செல்லும் வகையில் சிறப்பு சஸ்பென்ஷன்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதன் பாடி மிக மிக கட்டுறுதியாகவும், அதிக உறுதி கொண்டதாகவும் இருக்கும். விஐபிகளின் பைலட் வாகனமாகவும் பயன்படுத்தும் வசதிகளுடன் இந்த புதிய சஃபாரியில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். சஃபாரி ஸ்ட்ராம் ஜிஎஸ் 800 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்க எஸ்யூவியின் விலை அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








