கார் பைனான்ஸ் நிறுவனத்தை துவங்கிய டொயோட்டா

கார் கடன் நடைமுறைகளை விரைவாகவும், வாடிக்கையாளர்களுக்கு எளிய முறையில் பெறும் வகையில் பல்வேறு வாகன நிறுவனங்கள் சொந்தமாக பைனான்ஸ் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஜப்பானிய நிறுவனமான டொயோட்டோவும் கார் கடன் சேவையை துவங்கியிருக்கிறது.
ரூ.260 கோடி முதலீட்டுடன் இந்த பைனான்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. முதலில் புதிய கார்களுக்கும், பின்னர் யூஸ்டு கார்களுக்கும் தனது கடன் வழங்கும் சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து டொயோட்டா பைனான்ஸ் சிஇஓ கஸுகி ஒகுரா கூறியதாவது:
"நடப்பு நிதி ஆண்டிற்குள் டொயோட்டாவின் 50 சதவீத விற்பனையில் எங்களது சொந்த பைனான்ஸ் மூலம் கடன் வழங்குவதற்கு இலக்கு வைத்துள்ளோம். பெங்களூர் மற்றும் டெல்லியில் முதலில் கடன் சேவையை துவங்கியிருக்கிறோம்.
மும்பை, புனே ஆகிய நகரங்களில் விரைவில் ஆட்டோ பைனான்ஸ் சேவை துவங்கப்படுகிறது," என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








