புதிய எக்ஸ்சி-60 பிரிமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்திய வால்வோ

உலகிலேயே அதிக பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமையை வால்வோ பெற்றுள்ளது.
வால்வோ நிறுவனம் தயாரிக்கும் கார்கள் அனைத்தும் பிரிமியம் அம்சங்களுக்கு குறைவிருக்காது. இந்த நிலையில், குறைந்த சிசி திறன் கொண்ட புதிய மாடல் எக்ஸ்சி-60 எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது வால்வோ.
இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ள இந்த புதிய எஸ்யூவியின் பேஸ் மாடல் ரூ.34.4 லட்சம் விலையிலும், டாப் வேரியண்ட் ரூ.37.4 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பிரிமியம் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் டி-3 டர்போ டீசல் எஞ்சின் 163 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஸ்யூவி, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வந்துள்ளது.
ஆடி க்யூ-5 மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-3 ஆகிய பிரிமியம் எஸ்யூவி மாடல்களுக்கு இது பெரும் போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








