இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை சோதனை செய்யும் ஃபியட்
இந்தியாவில் ஜீப் பிராண்டு எஸ்யூவி கார்களை தீவிரமாக சோதனை நடத்தி வருகிறது ஃபியட் நிறுவனம். கடந்த ஆண்டு டிசம்பரில் ஜீப் பிராண்டு எஸ்யூவிகளை சோதனைக்காக புனே அருகே ரன்ஜன்கான் பகுதியிலுள்ள தனது ஆலைக்கு கொண்டு வந்தது ஃபியட்.
இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஃபியட் ஜீப் பிராண்டு எஸ்யூவிகள் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேபாளத்தில் இமயமலைப் பகுதிகளில் வைத்து இந்த எஸ்யூவி கார்கள் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதுதவிர, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வெவ்வேறான சாலை நிலைகளில் வைத்து சோதனைகள் நடத்த டெஸ்ட் டிரைவர்களுக்கு ஃபியட் அறிவுறுத்தியிருக்கிறது
தவிரவும், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு ஒவ்வொரு காரையும் சோதனை செய்யவும் ஃபியட் கூறியிருக்கிறது. ரேங்லர் மற்றும் கெரோக்கீ ஆகிய எஸ்யூவி கார்கள் தற்போது இந்த சோதனையில் இடம்பெற்றுள்ளன.
Image source: Autocarindia


Click it and Unblock the Notifications








