ஜூன் 5ல் அறிமுகமாகிறது மஹிந்திராவின் புதிய ஹேட்ச்பேக் கார்!
அடுத்த மாதம் 5ந் தேதி வைப் ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக மஹிந்திரா அறிவித்துள்ளது.
வெரிட்டோ அடிப்படையில் 4 மீட்டருக்கும் குறைவான புதிய கார் ஒன்றை மஹிந்திரா வடிவமைத்துள்ளது.

வைப் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய காரில் 1.5 லிட்டர் டிசிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
இடவசதி, சொகுசு அம்சங்கள் என வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் வகையில் இந்த புதிய காரை களமிறக்குகிறது மஹிந்திரா.
இந்த நிலையில், வரும் ஜூன் 5ந் தேதி இந்த புதிய காரை மும்பையில் நடைபெறும் விழாவில் மஹிந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது.
வெரிட்டோவில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த புதிய காரிலும் இருக்கும். தவிர, அதிக மைலேஜ் கொடுக்கும் காராகவும் இருக்கும் என மஹிந்திரா அதிகாரி பிரவீன் ஷா கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








