சிஎன்ஜியில் இயங்கும் எர்டிகாவை அறிமுகப்படுத்தும் மாருதி
சிஎன்ஜியில் இயங்கும் எர்டிகா காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது.
எம்பிவி மார்க்கெட்டில் தற்போது அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை எர்டிகா பெற்றுள்ளது. மாதத்திற்கு சராசரியாக 6,000 எர்டிகா கார்கள் விற்பனையாகி வருகின்றன. இருப்பினும், டஸ்ட்டர், மஹிந்திரா குவான்ட்டோ உள்ளிட்ட கார்களால் எர்டிகாவுக்கு அதிக போட்டி இருந்து வருகிறது.

இதனை எதிர்கொள்ளும் விதமாக சிஎன்ஜியில் இயங்கும் எர்டிகா மாடலையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது மாருதி. மாதத்திற்கு 1,500 சிஎன்ஜி எர்டிகா கார்களை விற்பனை செய்ய மாருதி இலக்கு வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதவிர, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட எர்டிகா காரையும் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த வாரம்தான் ஆட்டோமேட்டிக் எர்டிகா அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








