டீசல் காரை வைத்துள்ளீர்களா? நீங்க தான் இந்த விஷயத்தில் உஷாரா இருக்கணும்! கொஞ்சம் தப்பு நடந்தாலும் அவ்வளவு தான்
எலக்ட்ரிக் காரில் பெட்ரோல்/ டீசலை நிரப்புவதற்கான துளைகளை தேடும் மனிதர்கள் உள்ள இந்த உலகில், பெட்ரோல் காரில் டீசல் அல்லது டீசல் காரில் பெட்ரோலை தவறுதலாக நிரப்பி விடுவது ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றம் அல்ல. பெட்ரோல் காரில் டீசலை நிரப்பிவிடுவது பெரியதாக எந்தவொரு பிரச்சனையையும் ஏற்படுத்தாது. ஏனெனில் பெட்ரோலை காட்டிலும் நன்கு சுத்திகரிக்கப்பட்டதே டீசல் ஆகும்.
ஆனால், டீசல் காரில் பெட்ரோலை நிரப்பிவிடுவது சில நேரங்களில் பெரிய பிரச்சனையை கூட ஏற்படுத்திவிடலாம். இது சாத்தியமில்லாததாகத் தோன்றினாலும், தற்செயலாக டீசல் காரில் பெட்ரோல் நிரப்புவது ஓட்டுநர்கள் இடையே சில சமயங்களில் நடக்கக்கூடிய விபத்து ஆகும். அத்தகைய சமயங்களில், உடனடியாக திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது உங்கள் காரின் எஞ்சின் பாதுகாப்பது மட்டுமின்றி, பெரிய பழுதுப் பார்ப்பு செலவைக் கணிசமாக குறைக்கலாம்.

படி 1: காரை ஸ்டார்ட் செய்வதற்கு முன் உங்கள் தவறை உணர்ந்தால், என்ஜினை ஸ்டார்ட் செய்ய வேண்டாம். என்ஜினை ஸ்டார்ட் செய்வது தவறான எரிபொருளை என்ஜின் அமைப்பு முழுவதும் பரப்பி, கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஆதலால், டீசல் காரை வைத்திருப்பவர்கள் எரிபொருள் நிலையத்திற்கு செல்லும்போது, டீசலை தான் காரில் நிரப்பினோமா என்பதை எப்போதும் காரை ஸ்டார்ட் செய்யும் முன் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
படி 2: டீசல் காரில் பெட்ரோலை நிரப்பிவிட்டு காரை ஸ்டார்ட் செய்துவிட்டாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி இந்த கவன குறைவை பற்றி பெட்ரோல் நிலையத்தில் உள்ள ஊழியர்களிடம் தெரிவிக்கவும். ஏனெனில், அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு கையாளுவது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கு வழிகாட்டலாம்.

படி 3: தவறுதலாக டீசல் காரில் பெட்ரோலை நிரப்பி விட்டால், அதுகுறித்து புலம்பிக் கொண்டோ அல்லது மற்றவர்களை காரணம் காட்டிக் கொண்டோ இல்லாமல், முடிந்தவரையில் விரைவாக நிரப்பப்பட்ட எரிபொருளை வடிகால் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வது அவசியம். பொதுவாக இத்தகைய சேவைகளை ஆட்டோமொபைல் சங்கங்கள் அல்லது உள்ளூர் கேரேஜ் வழங்குகின்றன.
படி 4: தவறான எரிபொருளை காரின் டேங்கில் இருந்து அகற்றுவது கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளக்கூடிய பணி. அதுவரை பொறுமை காத்துத்தான் ஆக வேண்டும். தவறான எரிபொருளை வெளியேற்றியதும், உங்கள் டேங்கில் சரியான எரிபொருளை நிரப்பி, சரியான எரிபொருளைச் என்ஜினின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுச் செல்ல சில நிமிடங்களுக்கு உங்கள் கார் என்ஜினை இயக்கவும்.

படி 5: அதன் பின் கார் வழக்கம்போல் நன்றாக இயங்குவது போல் உணர்ந்தாலும், மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை எடுத்த பிறகும், தவறான எரிபொருளால் காரில் வேறெந்த சேதமும் ஏற்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒரு அனுபவமிக்க மெக்கானிக்கிடம் வாகனத்தை கொண்டு செல்வது எப்போதும் புத்திசாலித்தனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தவறான எரிபொருளை நிரப்பிவிட்டால், அத்தகைய நேரத்தில் பதற்றமடையாமல் அமைதியாக இருப்பது மற்றும் அத்தகைய சூழ்நிலையில் சரியான நடவடிக்கைகளை எடுப்பது உங்கள் வாகனத்திற்கு குறைந்தபட்ச சேதத்தை உறுதிசெய்யும். மேற்கூறப்பட்ட நடவடிக்கைகள் சில செலவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அப்படியே காரை ஓட்டினால் ஏற்படும் இயந்திர சேதாரத்திற்கான பழுதுபார்ப்பு பில்களுடன் ஒப்பிடும்போது அவை அற்பமானவையே.


Click it and Unblock the Notifications









