சென்னை வெள்ளத்தால் மூழ்கிய வாகனத்தை காப்பாற்றுவது எப்படி? எக்ஸ்பர்ட் சொல்லும் அட்வைஸ்- வீடியோ!
சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கியதால் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளநீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகளை மூழ்கும் அளவிற்கு மழை வெள்ளம் வந்துள்ளது. இந்த தண்ணீர் வடிய இன்னும் அதிகமான காலம் தேவைப்படும் என்பதால் தற்போது மக்கள் எல்லாம் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். மக்கள் தங்கள் வாகனங்களை சாலையில் பார்க் செய்திருந்த நிலையில் வாகனங்களும் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளன.
தண்ணீர் வடிந்த பின்பு வாகனங்களை எப்படி பயன்படுத்த துவங்க வேண்டும் வாகனத்தை ஸ்டார்ட் செய்யலாமா வேண்டாமா உங்கள் வாகனம் உண்மையிலேயே மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு எக்ஸ்பர்ட் சொல்லும் பதில்கள் என்ன என்ற விபரத்தை தான் நாங்கள் வீடியோவாக வெளியிட்டு உள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
உங்கள் வாகனம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக அந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்யாமல் அருகில் உள்ள மெக்கானிக்கிடம் கொண்டு சென்று வாகனத்தை செக் செய்ய வேண்டும். மெக்கானிக் செக் செய்த பின்பு உங்கள் வாகனம் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை ஆய்வு செய்து அதன் பின்னர் வாகனத்தை பயன்படுத்துவது தான் சிறந்தது.

வாகனத்தின் இன்ஜின் உள்ளே தண்ணீர் இருக்கும்போது வாகனத்தை ஸ்டார்ட் செய்துவிட்டால் ஒட்டுமொத்த இன்ஜினும் பாலாகி போக வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேநேரம் வாகனத்தில் உள்ள இன்ஜின் உள்ள தண்ணீர் சென்று விட்டால் அதை நாமே எடுத்து விடலாம் என சில சொல்லும் ஐடியாவும் மோசமான ஐடியா தான். அதை மெக்கானிக்குகள் மட்டுமே வெளியில் எடுக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








