பைக், கார் விலைகள் குறைக்கப்பட்டதை மட்டும்தான் எல்லாரும் சொல்றாங்க! இன்ஸ்சூரன்ஸை பற்றி வாயே திறக்க மாட்றாங்க!
வாகனங்களுக்கான சமீபத்திய ஜி.எஸ்.டி (GST) விகிதக் குறைப்பு, கார் உரிமையின் செலவைக் குறைப்பதன் மூலம் நுகர்வோருக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. எனினும், இத்தகைய மாற்றம் வாகனங்களுக்கான காப்பீடு (Insurance) தொடர்பான சில குறைபாடுகளையும் வரம்புகளையும் ஏற்படுத்தக்கூடும். ஜி.எஸ்.டி விகிதக் குறைப்பால் காப்பீட்டுத் துறையில் சில எதிர்மறை விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கான உள்ளீட்டு வரிகளில் குறைப்பு இல்லாமல், கார்கள் உள்ளிட்ட பொருட்களின் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டால், அது "தலைகீழ் வரி அமைப்புக்கு" வழிவகுக்கும். இந்த நிலை காப்பீட்டாளர்களின் செலவுகளை அதிகரிக்கும். இதனால், நிறுவனங்கள் தங்களது அடிப்படை பிரீமியத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

ஆதலால் இது கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் செலவாக அமையும். ஜிஎஸ்டி 2.0 காரணமாக, காப்பீட்டு நிறுவனங்களின் மற்ற செலவுகள் அதிகரித்தாலும், அவற்றை அதிக பிரீமியங்கள் அல்லது குறைக்கப்பட்ட பலன்கள் மூலம் பாலிசிதாரர்களிடம் ஒப்படைக்கலாம். ஜி.எஸ்.டி குறைப்பின் முழுப் பலன்களும் பாலிசிதாரர்களுக்குக் கிடைக்குமா என்பது, உள்ளீட்டு வரி வரவு (ITC) ஆனது காப்பீட்டு நிறுவனத்தால் எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்தது ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, காப்பீட்டு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி குறைப்பின் அனைத்துப் பலன்களையும் நுகர்வோருக்கு வழங்குவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனென்றால், இவ்வாறு ஜிஎஸ்டி குறைப்புகளின் பலன்கள் மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை கண்காணிக்க முன்பு மத்திய அரசு சார்பில் ஒரு குழு செயல்பட்டுவந்தது. ஆனால், சில வருடங்களுக்கு முன் வேறொரு பணிகளுக்காக அந்த குழுவை மத்திய அரசு திசை திருப்பிவிட்டது.

ஆகையால், மக்களின் அதிகபட்ச சேமிப்பை உறுதி செய்ய, சந்தையில் தீவிர போட்டியும், நுகர்வோர் விழிப்புணர்வும் அவசியமாகிறது. மேலும், மூன்றாம் தரப்பு காப்பீட்டு பிரீமியங்கள் அரசால் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இந்த விகிதங்களை வாகனத்தின் என்ஜின் (Engine) கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கிறது.
எனவே, வாகனத்தின் ஜி.எஸ்.டி மாற்றங்கள் எதுவாக இருந்தாலும், மூன்றாம் தரப்பு கவரேஜ் பிரீமியங்களில் மாற்றம் இருக்காது. புதிய கார்களுக்கான ஜி.எஸ்.டி குறைப்பு, தற்போதுள்ள பாலிசிதாரர்களின் பிரீமியங்களில் எந்த உடனடி தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தற்போதைய பாலிசி காலம் முடியும் வரை, அவர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது.
உறுதியளிக்கப்பட்ட & தீர்மானிக்கப்பட்ட மதிப்பு (Insured Declared Value) ஆனது புதிய, குறைந்த கார் விலையின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்யப்பட்டால் மட்டுமே, இன்ஸ்சூரன்ஸ் புதுப்பித்தலின் போது ஏற்கனவே இன்ஸ்சூரன்ஸ் பாலிசி எடுத்த பாலிசிதாரர்களுக்கு பிரீமியத்தில் சிறிய குறைப்பு ஏற்படலாம். ஜி.எஸ்.டி மாற்றத்தால் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்கள் யாவும் பிரீமியம் தொகைக்கு மட்டுமே பொருந்தும்.

மற்றப்படி, இன்ஸ்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்கான செயல் முறைகளிலோ அல்லது பணத்தை பெற்ற பின்போ அவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு காரணியாக இருக்காது. கார்களுக்கு ஜி.எஸ்.டி குறைப்பு, வாகனங்களை மிகவும் மலிவாக மாற்றுவதன் மூலம், புதிய கார் வாங்குபவர்களுக்கு முதன்மையாகப் பயனளிக்கிறது.
குறைவான வாகன விலை, இன்ஷூர்டு டிக்ளேர்ட் வேல்யூ (IDV) குறைவதற்குக் காரணமாகிறது. விரிவான கார் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை ஆனது பகுதியளவு IDV-ஐ அடிப்படையாகக் கொண்டது என்பதால், இது புதிய கார்களுக்கு சற்று குறைந்த பிரீமியத்திற்கு வழிவகுக்கும். எனினும், ஜி.எஸ்.டி குறைப்பு காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதி அழுத்தங்களை உருவாக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிசிதாரர்கள் தாங்கள் தங்கள் செயல்பாட்டு செலவுகளுக்குச் செலுத்தும் வரி ஆனது குறைக்கப்பட்ட விகிதங்களுக்கு ஏற்பக் குறைக்கப்படாவிட்டால், அது அவர்களின் லாபத்தைப் பாதிக்கலாம். ஆகையால், பாலிசிதாரர்களுக்கான இலாபத்தை பெற்று தர வேண்டிய பொறுப்பு இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உள்ளது. அவர்கள் முறையாக செயல்படுகிறார்களா என்பதை அரசாங்கம் உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே ஜிஎஸ்டி 2.0 திருத்தங்களின் பலன்கள் எதிர்பார்த்தப்படி முழுமையாக மக்களுக்கு சென்று சேரும்.


Click it and Unblock the Notifications









