Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Movies இந்த ஒற்றுமையை நோட் பண்ணீங்களா?.. ஸ்டார் நடிகர்கள் ஒரே மாதிரி வந்து ஓட்டுப் போட்டு இருக்காங்களே!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காரில் கூடுதல் எரிபொருள் நிரப்ப முடியுமா? - சந்தேகத்திற்கான பதில்!
காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது அளவு தொடர்பாக நேற்று ஒரு பிரச்னை வெடித்து போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. அதாவது, கார் தயாரிப்பாளர் கொடுத்த நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பெட்ரோல் டேங்க்கில் உள்ள ஊழியர் கூடுதலாக எரிபொருள் நிரப்பிவிட்டதாகவும், அது எவ்வாறு சாத்தியம் என்று கூறி வாடிக்கையாளருக்கும், பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கும் பெரும் பிரச்னையாகிவிட்டது.
பொதுவாக பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவது தொடர்பாக பிரச்னைகள் ஏற்படுவது வழக்கமான செயலாகத்தான் உள்ளது. இருப்பினும், சில தவறான புரிதல்கள் காரணமாக, பெட்ரோல் நிலையத்தில் தேவையற்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் பெட்ரோல் நிலைய பிரச்னையும் தவறான புரிதல் காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக, இரு தரப்பும் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
அதாவது, வாடிக்கையாளர் வைத்திருந்த ஃபோர்டு ஐகான் காரின் பெட்ரோல் டேங்க் 45 லிட்டர் கொள்திறன் கொண்டதாக தயாரிப்பாளர் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோல் நிலையத்தில் 48 லிட்டர் பெட்ரோல் நிரப்பியதாக கூறியதால், பிரச்னை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் கூறும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எரிபொருள் நிரப்புவதற்கான வசதியுடன்தான் எரிபொருள் கலன் வடிவமைக்கப்படுகிறது. தவிரவும், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்படுகின்றன. இதில், பாதுகாப்பு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளது.
இதனால், பெரும்பாலான கார்களின் எரிபொருள் கலன் சில லிட்டர்கள் வரை கூடுதலாக நிரப்பும் வசதியை பெற்றிருக்கின்றன. மேலும், பெட்ரோல் வழங்கும் எந்திரத்தின் கன் எனப்படும் குழாய் முனையில் சென்சார் இருப்பதால், பெட்ரோல் கலனில் வைத்து நிரப்பும்போது தானாகவே பெட்ரோல் வழங்கும் முறை ரத்து செய்யப்படும் வசதியும் உள்ளது.
ஆனால், சில நேரங்களில் டாப்-அப் முறையில் எரிபொருள் வழங்கும் குழாயை வெளியில் எடுத்து எரிபொருள் கலனில் கூடுதலாக எரிபொருள் நிரப்பும்போது அளவு கூடுதலாகிவிடுகிறது.
தயாரிப்பாளர் கையேட்டில் தெரிவித்துள்ள எரிபொருள் கலனின் கொள்திறன் அளவு என்பது பரிந்துரைக்கப்பட்ட அளவாகவே எடுத்துக் கொள்ளலாம். அது எரிபொருள் கலனின் முழுமையான கொள்திறன் அளவாக கருத முடியாது. பெரும்பாலான கார்களில் இவ்வாறே எரிபொருள் கலன் கூடுதல் கொள்திறன் கொண்டதாக இருக்கின்றன.
கூடுதல் கொள்திறன் இருந்தாலும், தயாரிப்பாளர் பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே நிரப்புவது அவசியம். டாப்-அப் செய்து நிரப்புவது உள்ளே இருக்கும் அளவீட்டு சென்சார் உள்ளிட்ட கருவிகளின் கணக்கீடுகளில் கோளாறை ஏற்படுத்தும் என்பதுடன், அது செயலிழக்க செய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், எரிபொருள் வெப்பநிலைக்கு தக்கவாறு விரிவடையும் வாய்ப்பு இருப்பதால், எரிபொருள் கலனில் சற்று இடைவெளி இருப்பதும் அவசியம். இதற்காக, கூடுதல் அளவுடன் கொள்திறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது.
ஆனால், இதில் தவறு நடக்க சாத்தியக்கூறுகள் இல்லை என்றாலும், சில நேரங்களில் தவறுகள் தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, எரிபொருள் நிரப்பும்போது வாகன ஓட்டிகள் விழிப்புடன் செயல்படுவதே சாலச்சிறந்த வழியாக இருக்கும். பெட்ரோல் நிரப்பும்போது அதிக கவனத்துடன் செயல்படுவதே இந்த பிரச்னைகளை தவிர்க்க ஒரே சிறந்த வழி.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!