Just In
- 2 min ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 9 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நெடுஞ்சாலையில் கார் ஓட்டும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிகள்!
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது விபத்தை தவிர்ப்பதற்கான சில எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.
அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் நெடுஞ்சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சிறந்த கட்டமைப்புடன் அமைக்கப்படும் சாலைகளால் விபத்துக்கள் குறையும் என்று கருதப்பட்ட நிலையில், மாறாக தற்போது நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, கோடை விடுமுறை காலங்களில் விபத்துக்கள் அதிகம் நடப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், நீண்ட தூரம் பயணிப்போர் மற்றும் நெடுஞ்சாலையில் பயணிப்போர் சில வழிகளை மனதில் வைத்தால் விபத்துக்களை அறவே தவிர்க்க வழி கிடைக்கும்.
நீண்ட தூர பயணம் புறப்படும்போது காரை ஓட்டுபவர் போதிய ஓய்வு எடுத்திருப்பது அவசியம். தூக்கமின்மை, மன அழுத்தத்தில் இருக்கும்போது கார் ஓட்டுவதையோ, பயணம் கிளம்புவதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.
அடுத்து கார் நல்ல கண்டிஷனில் இருப்பதும் அவசியம். அதிகம் தேய்ந்த டயர்களை மாற்றிவிட்டு புறப்படுங்கள். பிரேக் சிறப்பாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும்.
நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். சிலர் பேசிக் கொண்டே செல்லும்போது கவனம் சிதறி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.
நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். சிலர் பேசிக் கொண்டே செல்லும்போது கவனம் சிதறி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.
நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது முழு கவனமும் சாலையில் இருக்க வேண்டும். சிலர் பேசிக் கொண்டே செல்லும்போது கவனம் சிதறி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றனர்.
மது அருந்தினால் கார் ஓட்டுவதை தவிர்க்கவும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் எக்கச்சக்கமான விபத்துக்கள் நடக்கின்றன.
நெடுஞ்சாலையில் அச்சுறுத்தும் வகையில் வரும் வாகனங்களுடன் போட்டி போட வேண்டாம். வழிவிட்டு விடுங்கள். மேலும், சிறிய விஷயங்களுக்காக சண்டை போடுவதையும் தவிர்த்துக் கொள்ளவும். இதனால், பிபி எகிறி, கார் ஓட்டும்போது தவறுகள் செய்ய வாய்ப்பு ஏற்படும்.
எந்த ஒரு வாகனத்தையும் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து செல்ல வேண்டாம். குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் இது மோசமான விபத்துக்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் வையுங்கள்.
ஸ்டீயரிங் வீலை இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு ஓட்டவும். ஒரு கையால் ஓட்டுவது, தண்ணீர் பாட்டிலை பிடித்துக் கொண்டு, கைகளை எடுத்துவிட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.
அதிவேக தடத்தில் தொடர்ந்து பயணிக்காதீர். ஓவர்டேக் செய்யும்போது மட்டும வலது ஓரத்தில் இருக்கும் அதிவேக தடத்தை பயன்படுத்த வேண்டும்.
சீரான வேகத்தில் செல்ல பழகிக் கொள்ளுங்கள். வேக வரம்பு குறித்த எச்சரிக்கையை மனதில் வைத்து ஓட்டவும். பள்ளி வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகளில் வேகத்தை குறைத்து நிதானமாக செல்லவும்.
இரவு நேர பயணத்தை அறவே தவிர்க்கவும். அதுபோன்றே, அதிகாலை 4 மணிக்கு பயணம் கட்டுவதையும் தவிர்க்கவும். விடிந்த பின்னர் பயணத்தை துவங்குவதே சாலச் சிறந்தது.
நெடுஞ்சாலைகளில் உள்ள சாலை சந்திப்புகளை கவனமாக கடக்கவும். சில வேளைகளில் கனரக வாகனங்கள் மிக வேகமாக திரும்புவதற்கு முற்படும் வாய்ப்பு இருக்கிறது.
மழை உள்ளிட்ட மோசமான வானிலைகளின்போது வேகத்தை குறைத்து, நிதானமாக செல்லுங்கள். அவசரப்பட்டால் விபத்து நிச்சயம் என்பதை மனதில் வைத்து விவேகமாக செயல்படவும்.
நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது காரை நிறுத்தி 20 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். காருக்கும் ஓய்வு கொடுங்கள்.
-
இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!