நடுரோட்டுல கார் ரிப்பேர் ஆகி நின்னுடுச்சுன்னா இதை மட்டும் பண்ணுங்க ஈஸியா தப்பிச்சிடலாம்!
நீங்கள் ஒரு நெடுஞ்சாலையில் பயணிக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம், நீங்கள் உங்கள் வாகனத்தில் சவாரி செய்து மகிழ்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், திடீரென்று உங்கள் கார் செயல்படாமல் பழுதடைகிறது. இந்த சூழ்நிலை உங்களுக்கும் உங்களுடன் மன முழுத்தம் செய்தவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும், ஆனால் அதை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என் விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்த சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டிய முதல் படி உங்கள் வாகனத்தில் உள்ள ஆபத்து அல்லது அவசர லைட்டுகளை இயக்க வேண்டும். நீங்கள் சிக்கலைச் சந்திக்கும் சூழ்நிலையை பிற ஓட்டுனர்களை புரிந்து கொள்வதற்காக இந்த லைட்டுகள் எச்சரிக்கும். உங்களுக்கு உதவி வரும் வரை இந்த லைட்டுகளை எரிய வைக்க வேண்டும்.

அடுத்து உங்கள் வாகனம் பழுதடையப்போகிறது என தெரிந்தவுடன் உங்கள் வேகத்தைக் குறைத்து, உங்கள் காரை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்துங்கள். பழுதடைந்த உங்கள் வாகனம் சாலையின் நடுவில் நிறுத்துவது விடுவது ஆபத்தானது. மேலும் சிக்கல்களைத் தவிர்க்க, போக்குவரத்திலிருந்து விலகியிருக்கும் ஒரு இடத்தைக் கண்டறியவும்.
இது போன்ற சூழ்நிலைகளில் அவசரகால அல்லது பார்க்கிங் பிரேக்கைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. உதாரணமாக, உங்கள் கார் ஒரு மலை பகுதியில் பழுதாகிவிட்டால், அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால், அது இறக்கத்தில் உருண்டு, விபத்துக்கு வழிவகுக்கும். அதனால் பாக்கிங் பிரேக்கை கார் நகராமல் இருக்க பயன்படுத்துங்கள்.

ஆள் நடமாட்டம் இல்லாத தொலைதூரப் பகுதியில் கார் ரிப்பேர் ஆகிவிட்டால், சாலையில் நிற்பதை விட உங்கள் காருக்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது. நீங்கள் எதையாவது ஆய்வு செய்யவோ அல்லது சரிசெய்யவோ வெளியே செல்ல வேண்டும் என்றால், முதலில் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உறுதிசெய்து, பின்பு சுற்றுப்புறங்களைச் சரிபார்க்கவும். எல்லாம் சரியாக இருந்தால் மட்டும் காரிலிருந்து வெளியே வரவேண்டும்.
மற்றொரு முக்கியமான படி உதவி தேடுவது. உங்கள் காரின் ஹூட்டை திறந்து வையுங்கள், இதன் மூலம் உங்களுக்கு சிக்கல்கள் இருப்பதை மற்ற டிரைவர்கள் அறிந்துகொள்வார்கள் மற்றும் எச்சரிக்கையுடன் கடந்து செல்வார்கள். உங்கள் வாகனம் ரிப்பேராகி இருப்பதை குறிக்க, பிரதிபலிப்பு முக்கோணங்களைப் பயன்படுத்தலாம்.

போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களின் உதவியை நாடுவது நல்லது. அவர்கள் அணுக முடியாவிட்டால், சாலையோர உதவிக்கு அவசர எண்கள் அல்லது உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை அழைக்கவும். இப்போதெல்லாம், டோயிங் டிரக்குகள், மெக்கானிக்ஸ் அல்லது சாலையோர உதவி சேவைகளை எளிதாக பதிவு செய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன.
கார் செயலிழப்பை நிதானமாகவும் திறமையாகவும் கையாள்வது உங்களுக்கும் மற்ற சாலைப் பயனாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது தொழில்முறை உதவி வரும் வரை நிலைமையை நிர்வகிக்க உதவும். இது போன்ற சம்பவங்களில் கூட சாலையில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த பிரச்சனைகளில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இனி நீங்கள் சாலையில் பயணம் செய்யும் போது உங்கள் காரில் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ அல்லது பஞ்சர் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தாலோ மேலே சொன்ன டிப்ஸ்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க! நிச்சயம் நீங்கள் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும்.


Click it and Unblock the Notifications









