வேற வழியே இல்ல!! சாலை விபத்து உயிரிழப்புகளை தடுக்க இதுதான் ஒருவழி... விழிக்குமா மத்திய அரசு!
இந்தியாவைப் போன்ற பெரிய மற்றும் பன்முக மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு, துல்லியமான போக்குவரத்து நிர்வாகத்தை உறுதி செய்வது ஒரு பெரிய பணியாகும். இதனாலேயே, பாதுகாப்பான போக்குவரத்து என்கிற நமது இலட்சியத்தில் இருந்து தற்போதுள்ள யதார்த்த சூழல் வெகு தொலைவில் உள்ளது.
அதிகரித்து வரும் மோட்டார்மயமாக்கல் மற்றும் நகரமயமாக்கலின் எழுச்சி ஆகியவற்றுடன், நாட்டின் போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் எண்ணற்ற குறைபாடுகள் மிகவும் வெளிப்படையாகத் தெரிகின்றன. இந்த குறைபாடுகள் நெரிசல் மற்றும் திறமையின்மைக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் ஏற்படும் அதிக சாலை விபத்து விகிதங்களின் குறிப்பிடத்தக்க காரணங்களாவும் உள்ளன. இந்தியா, அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், அதிக சாலை போக்குவரத்து விதிமீறல்களை சந்திக்கிறது.

போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் சாலைக் கட்டமைப்பில் சில குறைப்பாடுகள், போக்குவரத்து விதிகளின் மோசமான அமலாக்கம், சாலையைப் பயன்படுத்துபவர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவது, ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாதது போன்ற பல்வேறு சவால்களை போக்குவரத்து விஷயத்தில் இந்தியா எதிர்கொள்கிறது. இந்த காரணிகள் அனைத்தும் ஒரு குழப்பமான போக்குவரத்து அமைப்புக்கு வழிவகுப்பது மட்டுமின்றி, இதன் விளைவாக மனித மற்றும் இயற்கை வளங்களிலும் சேதாரங்கள் ஏற்படுகின்றன.
நமக்கு தெரிந்த மிகவும் வெளிப்படையான பிரச்சினைகளில் ஒன்று, நன்கு கட்டமைக்கப்பட்ட சாலை உள்கட்டமைப்பு இல்லாதது. போதுமான அளவில் சாலைகள் இல்லாதது, மோசமான சாலை வடிவமைப்பு, சரியான எச்சரிக்கை பலகைகள் இல்லாதது அல்லது அதனை வாகன ஓட்டிகள் முறையாக கவனிக்காதது மற்றும் பாதசாரிகளுக்கான பாதைகள் இல்லாதது ஆகியவை சாலை உள்கட்டமைப்பு தொடர்பான பல சிக்கல்களில் சில. இந்த சிக்கல்கள் குழப்பமான போக்குவரத்து நிலைமைகளை உருவாக்குகின்றன, மேலும் சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கின்றன.

போக்குவரத்து சட்டங்களை முறையாக அமல்படுத்துவது போக்குவரத்து அமைச்சத்திற்கு உள்ள மற்றொரு சிரமமான காரியமாக விளங்குகிறது. சாலையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பது கண்டிப்புடன் கவனிக்காததால், பல ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை அப்பட்டமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறுக்குவழிகளைத் தேடுகிறார்கள் மற்றும் தங்கள் உயிரையும் மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கிறார்கள்.
இதற்கு, கடுமையான தண்டனைகள் இல்லாதது மற்றும் ஊழல் நடைமுறைகள் முக்கியமான பங்களிக்கின்றன என்பதை சொல்லியே ஆக வேண்டும். இதனால் விபத்து விகிதங்கள் அதிகரிக்கின்றன. இந்தியாவில் அதிக சாலை விபத்து விகிதம் போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் உள்ள குறைபாடுகளின் நேரடி வெளிப்பாடாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, சாலை விபத்துகளால் இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 150,000 இறப்புகள் ஏற்படுகின்றன.

மொத்த நாட்டின் மக்கள் தொகை உடன் ஒப்பிடுகையில் இந்த சாலை விபத்து உயிரிழப்பு விகிதம் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும், சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. போக்குவரத்து மேலாண்மை அமைப்பை மேம்படுத்துவது என்பது ஆட்டோமொபைல் வாகனங்களின் செயல்திறன் மற்றும் இயக்க மூல எரிபொருளை மேம்படுத்துவது மட்டுமல்ல, உயிர்களைக் காப்பாற்றுவதும் ஆகும்.
இந்தியாவின் போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் குறைபாடுகள் அதிகமாக இருப்பது மட்டுமில்லாமல், தொலைநோக்கு உடன் சிந்தித்து தீர்வு காணப்பட வேண்டியவைகளாகவும் உள்ளன. அதாவது, நாளுக்கு நாள் சாலை போக்குவரத்தில் ஏற்படும் நெரிசல்கள் முதல் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து உயிரிழப்புகள் வரையில் அனைத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தப் பிரச்சினைகள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டறிவது முதல் படி ஆகும். அதன்பின், இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மற்றும் குடிமக்கள் இருவரின் ஒருங்கிணைந்த முயற்சிகளும் தேவை. வலுவான சட்டத்தை அமல்படுத்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், அமலாக்க வழிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் மனசாட்சியுடன் சாலைப் பயன்பாட்டுப் பழக்கங்களை வளர்ப்பது ஆகியவை இந்தியாவின் போக்குவரத்து சூழ்நிலையை மாற்றுவதில் இன்றியமையாதவை.


Click it and Unblock the Notifications









