கோவையில் கார்கள் மீது சிதறிய தார்..! காரில் இருந்து தாரை அகற்ற பாதுகாப்பான வழிமுறை இதோ..!
கோவையில் கார்கள் மீது தார் சிதறிய செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அந்த கார்களில் இருந்து தார்களை எப்படி பாதுகாப்பாகவும் அகற்றுவது என்று உங்களுக்கு தெரியுமா?
கோவையில் கார்கள் மீது தார் சிதறிய செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அந்த கார்களில் இருந்து தார்களை எப்படி பாதுகாப்பாகவும் அகற்றுவது என்று உங்களுக்கு தெரியுமா? இந்த செய்தியில் காரில் உள்ள தாரை பாதுகாப்பாகவும் சுலபமாகவும் அகற்றும் வழியை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

கோவை 100 அடி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேம்பால பணி கிட்டத்தட்ட முடிவடையும் சூழ்நிலையில் உள்ள நிலையில் தற்போது ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

நேற்று ரோடு போடுவதற்காக தார் டிரம்கள், ஜல்லி கற்கல் என அனைத்து பொருட்களும் மேம்பாலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மேம்பாலத்திற்கு மேல பணிகள் துரிதமாக நடந்து வந்தது. மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஒன்று பணியின் போது எதிர்பாராத விதமாக தார் டிரம்மை இடித்து அதன் மீது ஏறியது. இதனால் தார் டிரம் வெடித்து, அதில் இருந்த தார்கள் எல்லாம் சிதறியது.

இந்த தார் டிரம்ப் மேம்பாலத்திற்கு மேல் பகுதியில் மட்டுமல்லாமல் மேம்பாலத்திற்கு கீழேயும் சிதறியது. அதிஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

எனினும் அப்பகுதியில் சில கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த கார்கள் மீது தார் சிதறியது. இதனால் சில கார்கள் முழுவதும் தார் படர்ந்தது. இச்செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் அப்பகுதியில் இருந்த கார்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்
தார் என்பது கருப்பு நிற அதிக பிசுபிசுப்பு தன்மையுள்ள ஒரு பொருள், புதிதாக போடப்பட்ட ரோட்டில் நாம் செல்லும் போது காரின் கீழ் பகுதியில் தார்கள் தெரிந்து பிடிந்திருக்கும். அவற்றை நீக்க மார்க்கொட்டில் சில வழிமுறைகள் உள்ளன.

தார் அதிக பிசுபிசுப்பு தன்மையுடன் இருப்பதால் அது உடனடியாக காரின் பெயின்ட்டுடன் ஓட்டிக்கொள்ளும், இதனால் காரில் இருந்து தாரை பிரிப்பது என்பது சற்று கடினம் தான்.

ஆனால் நீங்கள் உங்கள் காரை வேக்ஸ் செய்திருந்தால் காரின் பெயிண்ட் பாதிக்கப்படுதற்கான வாய்ப்புகள் குறைவு தான். தற்போது இந்த காரில் படிந்துள்ள கரையை எப்படி சுத்தப்படுத்துவது என பார்க்கலாம்

காரில் உள்ள தார் கரைகளை சுத்தப்படுத்த தார் ரிமூவர் என்ற ஒரு திரவ பொருள் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை வாங்கி தார் படிந்த உள்ள இடங்களில் சிறிது சிறிதாக ஸ்பியரே செய்து ஒரு துணியை வைத்து துடைத்தால் காரில் தார் நீங்கும்.

இவ்வாறாக காரில் இருக்கும் தார் முழுவதையும் நீங்கள் அகற்ற வேண்டும். பின்னர் காரை நன்கு சுத்தப்படுத்தி பின்னர் காரை வேக்ஸ் செய்ய வேண்டும் இதன் மூலம் காரில் உள்ள தாரை அகற்றலாம். இதன் மூலம் காரின் பெயிண்ட் போகாமல் தாரை அகற்றலாம்.

தார் மிக கடினமாக உள்ளது என மிகவும் கடினமான பொருட்களான உப்புதாள், சில்வர் சவுரி ஆகியவற்றை வைத்து தேய்த்து விடாதீர்கள்... இது காரின் பெயிண்ட்டை பாதிக்கும். இதனால் உங்கள் காரின் தோற்றம் நாசமாகிவிடும்.

இச்சம்பவத்தில் காரில் படிந்துள்ள தார் கரைகள் அதிகளவு இருப்பதால் அந்த அளவிற்கு ஏற்ப தார் ரிமூவரை பயன்படுத்த வேண்டும். மேலும் இச்சம்பவத்தின் படத்தை பார்க்கும் போது காரின் கண்ணாடிகளிலும் தார் படிந்துள்ளது.

இதனால் இதையும் இவ்வாறே சுத்தப்படுத்தி பின்னர் கண்ணாடியை தனியாக சுத்தப்படுத்த வேண்டும். இதை எவ்வளவு சீக்கரம் முடியுமே அவ்வளவு சீக்கரம் செய்ய வேண்டும்.

ஏன் என்றால் தார் என்பது நாளாக நாளாக இறுகிவிடும். இதனால் அதிக நாட்கள் கழித்து இதை செய்ய முயன்றால் காரில் உள்ள தாரை அகற்றுவது என்பது மிகவும் கடினமான விஷயமாக மாறிவிடும்.

சம்பவம் நடந்த மேம்பாலம் என்பது இதற்கு முன்பும் சர்ச்சையில் சிக்கியது. இந்த மேம்பாலத்திற்கு முதலில் போடப்பட்ட பிளான் வேறு எனவும், இரண்டாவதாக வேறு பிளான் போடப்பட்டு பாலம் கட்டப்பட்டதுள்ளதையும், தற்போதுள்ள பாலத்தால் மக்களுக்கு பயன் இல்லை எனவும் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரியவந்தது.

முதலில் போடப்பட்ட பிளான் படி கட்டினால் பல வணிக வளாகங்கள் இடிக்கப்பட வேண்டிய சூழ்நிலை இருந்ததால் பிளான் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த தற்போது கட்டப்பட்டுள்ள பாலம் மிகவும் செங்குத்தாக இருப்பதாகவும், மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இந்த பாலம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என பின்னர் அரசு அறிவித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட பாலத்தை எப்படி மாற்றியமைக்க போகிறார்கள் என்பது கேள்வி குறிதான்.


Click it and Unblock the Notifications








