சாதாரண மழை தண்ணியால கார்ல இவ்ளோ பிரச்னைகள் வருமா! இந்த விஷயத்தை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பருவ மழை (Monsoon) பெய்து வருகிறது. பருவ மழை பெய்வது விவசாயிகள் உள்பட நம் அனைவருக்கும் நன்மை பயக்க கூடிய ஒன்றுதான். எனினும் மழை நீர், கார்களுக்கு எதிரி என்பது கார் உரிமையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.
காரின் வெளிப்புற வண்ணப்பூச்சுக்களில், மழை நீர் சேதத்தை ஏற்படுத்தும். அத்துடன் துரு மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். மேலும் இன்ஜின் மற்றும் மின் கூறுகளுக்குள் ஊடுருவி, சாத்தியமான செயலிழப்புகளையும் மழை நீர் ஏற்படுத்தும். இதுகுறித்த விரிவான தகவல்களையும், இதையெல்லாம் எப்படி தடுப்பது? என்பதையும் கார் உரிமையாளர்கள் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். அதற்காகதான் இந்த செய்தி.

அமில மழையின் தாக்கம்: அமில மழை என்பது, வளிமண்டலத்தில் உள்ள மாசுபாடுகளால் அதிக அளவு அமிலத்தன்மையை கொண்டிருக்கும் ஒரு வகை மழையாகும். அமில மழை உங்கள் காரின் மேற்பரப்பில் விழும்போது, வண்ணப்பூச்சுக்களை படிப்படியாக சிதைத்து விடும். இது உங்களுக்கு அதிகப்படியான செலவை ஏற்படுத்தலாம்.
துரு மற்றும் அரிப்பு: மழைநீரில் ஈரப்பதம் இருப்பதால், உங்கள் காரின் உலோக பரப்புகளில் துரு உருவாகும் வாய்ப்பு அதிகம். இந்த துரு உங்கள் காரின் அழகை பாதிக்க கூடிய விஷயமாக இருக்கும். அத்துடன் காலப்போக்கில் உங்கள் காரின் கட்டமைப்பு ஒருமைப்பாட்டையும் இது பலவீனப்படுத்தி விடும்.

இதுதவிர பிரேக் லைன்கள் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்புகள் போன்ற பிற பகுதிகளில் அரிப்பும் ஏற்படலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது அழகியல் என்பதை கடந்து, பாதுகாப்பு அபாயங்களுக்கு வழிவகுக்கும் என்பது கார் உரிமையாளர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.
மின் பிரச்னைகள்: ஸ்பார்க் பிளக்குகள் போன்ற உணர்திறன் வாய்ந்த மின் கூறுகளுக்குள் தண்ணீர் நுழைந்தால், உங்கள் காரில் பல்வேறு மின் பிரச்னைகள் ஏற்படலாம். இன்ஜின் ஸ்டார்ட் ஆகாமல் போவது மற்றும் விளக்குகள் எரியாமல் போவது போன்ற பிரச்னைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

தடுப்பு நடவடிக்கைகள்: மழை நீரின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்கள் காரை பாதுகாக்க, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன. உங்கள் காரில் அவ்வப்போது வேக்ஸிங் மற்றும் பாலிஷிங் செய்வதன் மூலம், ஈரப்பதத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்க முடியும். அத்துடன் வெளியில் பார்க்கிங் செய்யும்போது நீர்ப்புகா கார் கவர்களை பயன்படுத்தினால், கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.
அத்துடன் வழக்கமான பராமரிப்பு மற்றும் சுத்தம் ஆகியவையும், உங்கள் கார் மழைநீரால் சேதமடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்படி காரின் மேற்பரப்பில் குவிந்துள்ள அழுக்குகளை உடனடியாக அகற்றுவது மிகவும் முக்கியம். ஏனெனில் அவை ஈரப்பதத்தை பிடித்து, அரிப்பை துரிதப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மறுபக்கம் வழக்கமான ஆய்வுகள், ஏதேனும் சாத்தியமான சிக்கல்களை மோசமாக்கும் முன் அடையாளம் காண உதவுகின்றன. எனவே மழை காலத்தில் கார் முழுவதையும் அவ்வப்போது ஆய்வு செய்யுங்கள். இதன் மூலம் பிரச்னை தீவிரமடைவதற்கு முன்பே கண்டறிந்து, அதனை உங்களால் எளிதாக சரி செய்து விட முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை நீர்தானே என நீங்கள் அலட்சியமாக இருந்தால், அது மேற்கண்ட பிரச்னைகளை எல்லாம் ஏற்படுத்தி விடும். இது விலை உயர்ந்த பழுதுபார்ப்புகளுக்கு வழிவகுத்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். எனவே தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதும், வழக்கமான பராமரிப்பை மேற்கொள்வதும் மிகவும் முக்கியம்.


Click it and Unblock the Notifications









