Just In
- 36 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
11 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்... ஒரே நாளில் ஹீரோவாக மாறிய சிறுவன்...!
தனது பாட்டியின் உயரை காப்பாற்ற பென்ஸ் காரை ஓட்டி சென்றுள்ள 11 வயது பள்ளி மாணவன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அவர் அப்படி என்ன செய்தார் என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் குறிப்பிடத்தக்க வயதினை எட்டாத வரையில் யாவாராயினும் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இந்த குறிப்பிடத்தக்க வயது நாட்டிற்கு நாடு வேறுபடக்கூடும்.

ஆனால் எப்படியிருந்தாலும் 11 வயது சிறுவன் காரை இயக்குவதற்கு எந்தவொரு நாட்டு சட்டம் இடம் அளிப்பதில்லை. ஆனால் இங்கு நாம் பார்க்க போகும் சம்பவத்திற்கு இத்தகைய சட்டங்களை பார்த்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது.

பிஜே ப்ரூவர்-லே என பெயர் கொண்ட அந்த சிறுவன் கடந்த வாரத்தில் தான் தனது 12வது வயதை அடைந்திருந்தான். கே-கார்ட் என்ற திறந்தவெளி காரை ஓட்டிய அனுபவம் உள்ளவன். மேலும் சொந்தமாகவும் இத்தகைய திறந்தவெளி கார் ஒன்றை அவன் வைத்துள்ளதாகவும் தகவல் கூறுகின்றன.

அதில் சுற்றியிருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவரும் பிஜே, அவ்வாறு ஒருமுறை தனது அருகில் உள்ள சொந்தகாரர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த சமயத்தில் அவனுக்கு முன்பாக வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்ற அவனது பாட்டி ஏஞ்சலா ப்ரூவர்-லே ஒரு சாலையோரத்தில் சோர்வாக அமர்ந்து கொண்டிருப்பதை காண்கிறான்.

உடனே அருகில் சென்று பார்த்தவனுக்கு பேரதிர்ச்சியாக, கண்கள் சொருகிய பார்வையுடன் இருந்த அவனது பாட்டியின் இரத்த குளுக்கோஸ் அளவு 40 மி.கி-க்கும் குறைவாக சென்று கொண்டிருந்தது. இதனால் ஏஞ்சலா மிகவும் நடுஞ்கி கொண்டே அமர்ந்து இருந்துள்ளார்.

உடனே என்ன செய்வது என முதலில் குழம்பிய பிஜே, பிறகு தனது கோ-கார்ட் வாகனத்தை வீட்டில் நிறுத்திவிட்டு தனது பாட்டியின் மெர்சிடிஸ் பென்ஸ் காரை எடுத்து வந்துள்ளான். இதுகுறித்து ஏஞ்சலா கூறுகையில், நான் வாகன நிறுத்து கம்பத்தின் மீது சாய்ந்தபடி அமர்ந்திருந்தேன்.

என்னால் சுத்தமாக எழ முடியவில்லை. பிறகு சிறிது நேரத்தில் எனது வலதுப்பக்கமாக பார்த்தால் எனது பென்ஸ் கார் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. யார் காரை ஓட்டுவது என்று சற்று உற்றுப்பார்த்தால், பிஜே காரை இயக்கி வந்து கொண்டிருந்தான் என கூறினார்.

பி.ஜே.-விடம் ஓட்டுநர் உரிமம் இல்லை, இருப்பினும், கோ-கார்ட் போன்ற வாகனங்களை இயக்கியுள்ளதால் அவனுக்கு கார் ஓட்டத் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவனது தாத்தாவின் கார்களை வீட்டு முற்றத்திற்கு நகர்த்தியுள்ள அனுபவமும் அவனுக்கு உண்டு.
தனது பேரன் காரை இயக்க பின்னால் இருந்தபடி தன்னால் முடிந்த வழிமுறைகளை ஏஞ்சலா கூறியுள்ளார். அதேபோல் அந்த 11 வயது சிறுவனும் சாலை ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த கற்களுக்கு அருகிலும் சில இடங்களில் புற்கள் மீதும் பாதுகாப்பாக காரை ஓட்டி சென்றதாக அவனது பாட்டி தெரிவித்துள்ளார்.

அதன்பின் ஒருவழியாக கார் வீட்டை அடைந்தவுடன் பாட்டிக்கு தேவையான சில குளுக்கோஸ் மாத்திரைகளை கொடுத்துள்ளான். இந்த சம்பவம் குறித்து புகைப்படத்துடன் ஏஞ்சலா பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "இந்த குழந்தைக்கு வெறும் 11 வயது மட்டும் தான் ஆகுவதை உங்களிடம் முதலில் கூறி கொள்கிறேன்!!
ஆனால் உண்மையில் அவன் அவனது அம்மாவை விட சிறப்பாகவே காரை ஓட்டுகிறான்" என்று கூறியுள்ளவர், எஸ்யூவி, கேம்ரி, டிரக் அல்லது கமரோ உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு வாகனத்தை எடுத்து வராமல் ஏன் பென்ஸ் காரை எடுத்துவந்தாய் என்று வீட்டிற்கு வந்த பிறகு பிஜே-விடம் ஏஞ்சலா கேட்டுள்ளார்.
அதற்கு அவன் என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு, என் கைக்கு அதன் சாவி தான் முதலில் சிக்கியது என கூறியதாக தெரிவித்துள்ள ஏஞ்சலா, உண்மையில் அவன் இல்லை என்றால் நான் இல்லை. நன்றி பி.ஜே !! " எனவும் அந்த ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
Image Courtesy: 11Alive