Just In
- 48 min ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 1 hr ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 3 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Movies Sivakarthikeyan: புல்லட்டைவிட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புள்ளிங்கோவை குறி வைக்கும் போலீஸ்... 12 இளைஞர்கள் அதிரடியாக சுற்றி வளைப்பு... எதற்காக தெரியுமா..?
புள்ளிங்கோ இளைஞர்களை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.
சமீபகாலமாக பலர் வாய்களில் அடிபடும் வார்த்தையாக 'புள்ளிங்கோ' இருக்கின்றது. ஏன், விவாத மேடைகள்கூட இந்த பெயரை ஓர் தலைப்பாக வைத்து நடைபெற்றுள்ளன.
நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'பிகில்' திரைப்படத்தின் மூலும் இவ்வார்த்தை உலகளவில் டிரெண்டாகியுள்ளன.
மிகவும் வித்தியாசமாக தங்களுக்கு பிடித்த மாதிரியான, பளீரென்று அடிக்கின்ற நிறத்தில் உடை, காலணி, தலை முடி கலர் என புதிய ஸ்டைலில் சுற்றித்திரியும் இளைஞர்களே 'புள்ளிங்கோ' என அழைக்கப்படுகின்றனர்.
புள்ளிங்க என்ற வார்த்தை பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விஜய் படத்தின் மிக அதிகளவில் பேமஸாகியுள்ளது.
இந்த புள்ளிங்கோ என்று அழைக்கப்படும் இளைஞர்களைப் பார்த்தாலே, ஒரு சிலருக்கு தனி விதமான அச்சம் நிலவுவதாக கூறப்படுகின்றது. ஆனால், அவர்களைக் கண்டு அச்சம் கொள்வதற்கு எதுவுவே இல்லை என சில மனோதத்துவ மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேசமயம், மக்களின் இந்த அச்சத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது, அவர்களின் நடை, உடை, தோற்றம் என பல கூறப்படுகின்றது.
ஆனால், இதில் முக்கியமாக, புள்ளிங்கோ வண்டி ஓட்டும் விதமே மிக மோசம் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
பொதுவாக இளைஞர்கள் என்றாலே வாகனங்களை உச்சபட்ச வேகம் மற்றும் ரேஷ் டிரைவ் என குறிப்பிட்ட விசயங்கள் பழக்கப்பட்டவைதான். ஆனால், புள்ளிங்கோ திடீர் திடீரென ஹாரன் அடித்து அதிர்ச்சியுற செய்வது, வேகமாக செல்வது, புது மாதிரியாக வளைத்து வளைத்து ஓட்டுவது பலவிதமான அச்சுறுத்தல்களில் ஈடுபடுகின்றனர் என புகார்களை அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மட்டுமே புகழ்வாய்ந்த இந்த புள்ளிங்கோ தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியிலும் தென்பட ஆரம்பித்துள்ளனர். அதில், ஒரு சில இளைஞர்களைதான் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
இவர்கள், சென்னை புள்ளிங்கோ-க்களைப் போலவே வாகன ஸ்டண்டுகளில் ஈடுபட்டதாக வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, வாகனங்களை பொதுவெளியில் பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இயக்குவது கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். ஆனால், புள்ளிங்கோ மாதிரியான வாகன ஆர்வலர்கள் இந்த விதியை துளியளவும் மதிப்பதில்லை.
மேலும், நினைத்த இடங்களில் எல்லாம் தங்களின் சித்து வேலைகளை அவர்கள் காண்பித்து விடுகின்றனர். அவ்வாறு, சிக்னல் மற்றும் கூட்ட நெரிசல் என எதையும் பாராமல், மற்றவர்களின் கவனத்தை தங்கள் வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக திடீர் சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
மேலும், அதற்கான பலனையும் உடனுக்குடன் அனுபவித்து விடுகின்றனர். இதுபோன்ற, ரைடர்கள் நாட்டின் சாலையில் பலர் இருக்கின்றனர்.
அந்தவகையிலான 12 இளைஞர்கள் மீதுதான் பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், விலையுயர்ந்த கேடிஎம், பல்சர் மற்றும் டியோ உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் அடங்கும்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இந்த அதிரடி வேட்டையை நடத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக சுற்றி திரியும் இளைஞர்கள், திடீரென ஸ்டண்டில் ஈடுபடுவதாகவும், அவர்களால் பலர் ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும் மக்கள் கூறினர்.
ஆகையால், இதுகுறித்து கண்கானிப்பதற்காக மஃப்டியில் போலீஸார் குழு அமைக்கப்பட்டது. அவர்கள், பெங்களூரு நகரத்தின் பல முக்கியமான இடங்களில் மக்களுடன் மக்களாக கலந்து ஆய்வினை மேற்கொண்டனர்.
அவ்வாறு, ஆய்வு மேற்கொண்டதில் நகரத்தின் முக்கிய நகரங்களின் பல பகுதிகளில் அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்த பல புள்ளிங்கோ இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
அந்தவகையில், பெங்களூருவின் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே குழுவாக சுற்றித் திரிந்த 12 இளைஞர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தற்போது புள்ளிங்கோ மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!