Just In
- 27 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ. 62,000 வரை சில்லறை காசுகளாக சேமித்து சகோதரிக்கு ஹோண்டா ஸ்கூட்டர் வாங்கி தந்த அன்பு தம்பி..!!
ரூ. 62,000 வரை சில்லறை காசுகளாக சேமித்து சகோதரிக்கு ஹோண்டா ஸ்கூட்டர் வாங்கி தந்த அன்பு தம்பி..!!
சிறியவர்களாக இருந்தபோது நம்மில் பலர் எண்ணிக்கையில் அடங்கா சில்லரை காசுகளை சேர்த்து வைத்து நமது சொந்த தேவைகளுக்கும், ஆசைக்கும் ஏற்றவாறு செலவழித்திருப்போம்.
பெரும்பாலும் பெண் குழந்தைகள் உடை, பொம்மை மற்றும் ஆண் பிள்ளைகள் என்றால் கிரிக்கெட் மட்டை, பந்து போன்றவற்றை வாங்க அந்த சில்லரை காசுகளை பயன்படுத்தி இருப்போம்.
ராஜஸ்தான் ஜெய்பூரில் 13 வயது சிறுவன் யாஷ் தன்னோட சில்லறை காசு சேமிப்புகளைக் கொண்டு தனது சகோதரிக்கு புதிய ஸ்கூட்டர் வாங்கி பரிசளித்துள்ளான்.
சேமிக்கும் பணத்தை அதை சேமித்தவர் தான் பயன்படுத்துவார். பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் 13 வயதில் தனது சகோதரிக்காக இந்த சிறுவன் செய்த காரியம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Recommended Video
கடந்த தீபாவளி அன்று இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கையில் கனமான பையுடன் தனது சகோதரியை கூட்டுக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் ஷோரூம் படியேறினான் சிறுவன் யாஷ்.
ஷோரூம் வேலையாட்கள் சிறுவனிடம் அணுக, அதற்கு அவன் சகோதரிக்காக ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளான்.
இதை சற்று சிரிப்புடன் பார்த்த ஊழியர்கள், இருவரும் ஸ்கூட்டர் வாங்குவதில் தீவிரம் காட்டுவதை பின்பு உணர்ந்துக்கொண்டனர்.
Trending On Drivespark:
புதிய ஸ்கூட்டரை தேர்வு செய்த பிறகு அதற்கான கட்டணம் சில்லறைகளாக செலுத்தப்படும் என கையில் இருந்த பையை திறந்துக்காட்டினான்.
Trending On Drivespark:
மொத்த ரூ. 62,000. அனைத்தும் ரூ.10 சில்லறை நாணயங்களாக அந்த பையில் இருந்தன. இதைப்பார்த்து ஊழியர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தே போயினர்.
பிறகு சிறுவனது சகோதரி, ஸ்கூட்டரை தேர்வு செய்தார். அதற்கான முழு பணத்தையும் சில்லறை காசுகளாக ஷோரூம் நிர்வாகம் பெற்றுக்கொண்டது.
இதுப்பற்றி பேசிய ஷோரூம் டீலர் சந்தோஷ் குமார், பல வாடிக்கையாளர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் சில்லறைகள் காசுகள் கொண்டு ஸ்கூட்டருக்கு கட்டணம் செலுத்துவது இதுதான் முதல்முறை என்று கூறினார்.
இந்த சம்பவம் பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த சிறுவன், எப்போது காசு கிடைத்தாலும் அதை சேமித்துவிடுவேன். பணம் நோட்டாக கிடைத்தாலும் அதை சில்லறைகளாக மாற்றிவிடுவேன்.
என்னோடு சேர்ந்து எனது சகோதரியும் இந்த சேமிப்பிற்காக உதவினார். நாங்கள் இரண்டு பேரும் அதிகப்பட்சமா ரூ. 1500 வரை கூட சேமித்துள்ளோம் என்று கூறியுள்ளான் சிறுவன் யாஷ்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் நடந்துள்ள இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
குறிப்பாக சிறுவன் யாஷிற்கு பல வலைதள வாசிகள் தங்களது பாராட்டுதலை அதிகளவில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை படிக்கும் சிலர், பணமதிப்பிழப்பிற்கு பிறகு பலர் சில்லறை காசுகளை சேமிப்பதை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது என்பன போன்ற கமெண்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று அறிமுகம் செய்யப்பட்ட புதிய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களின் படத் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!