Just In
- 51 min ago நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- 1 hr ago பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- 2 hrs ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 3 hrs ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. ஏற்றுமதி செய்ய போகும் ராணிப்பேட்டை.. ஆட்டோமொபைல் புரட்சி
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Movies Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழகத்தில் சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்வு; அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கசாவடிகளில் வரும் செப்1ம் தேதி முதல் சுமார் 10 சதவீத கட்டணம் உயத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கசாவடிகள் எல்லாம் பெரும்பாலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதியில் இருந்த
தமிழ்நாட்டில் உள்ள 14 சுங்கசாவடிகளில் வரும் செப்1ம் தேதி முதல் சுமார் 10 சதவீத கட்டணம் உயத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கசாவடிகள் எல்லாம் பெரும்பாலும் தமிழ்நாட்டில் மற்ற பகுதியில் இருந்து சென்னை நோக்கி வரும் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடி ஆகும். குறிப்பாக மதுரை மற்றும் சேலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள சுங்கசாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு இடத்தில் சுங்கசாவடிகள் வசூலிக்கப்பட்டு அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களிடம் மத்திய அரசு கட்டணம் வசூலித்து வருகிறது. மத்திய அரசு சாலை கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக இந்த கட்டணத்தை வசூலிக்கிறது.
இந்த கட்டணம் மொத்த விற்பனை விலையை குறியீட்டை கணக்கில் கொண்டு ஒவ்வொரு சுங்கசாவடிக்கும் கட்டணம் நிர்ணயிக்கிறது. ஓவ்வொரு சுங்கசாவடியிலும் ஒவ்வொரு விதமான கட்டணம் பின்பற்றப்படுகிறது. இந்த சுங்கசாவடி கட்டண வசூலிற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் மத்திய அரசு இதை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டேட வருகிறது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு சுங்கசாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாற்றியமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ள செய்திதாள்களில் விளம்பரம் வெளியிட்டது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு சுங்கசாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாற்றியமைத்து அந்தந்த பகுதிகளில் உள்ள செய்திதாள்களில் விளம்பரம் வெளியிட்டது.
அதன் படி தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் இரந்து கார்கள் சுமார் 10 சதவீதம் வரையிலும், லாரி மற்றும் பஸ்கள் சுமார் 4-6 சதவீதம் வரையிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்து எந்த ரக வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் என்ற விபரமும் வெளியிடப்பட்டிருந்தது.
கட்டண உயர்வு செய்யப்பட்ட சுங்கசாவடிகள்
1.எலியார்பத்தி : மதுரை - தூத்துக்குடி சாலை
2.கொடை ரோடு : திண்டுக்கல் பைபாஸ்- சமயநல்லூர்
3.மேட்டுப்பட்டி : சேலம்- உளுந்தூர்பேட்டை
4. மொரட்டாண்டி: பாண்டிசேரி- திண்டிவனம்
5.நல்லூர் : சென்னை - தடா
6.நாதக்கரை : சேலம் - உளுந்தூர்பேட்டை
7.பொண்ணம்பலபட்டி : திருச்சி - திண்டுக்கல்
8.புதூர்பாண்டியபுரம் : மதுரை - தூத்துக்குடி
9. திருமான்துறை - உளுந்தூர்பேட்டை-பாடலூர்
10. வைகுண்டம் : சேலம் - குமாரபாளையம்
11. வல்லவன்கோட்டை : தஞ்சாவூர் - திருச்சி
12. வீரசோலபுரம் : சேலம் - உளுந்தூர் பேட்டை
13. விஜயமங்களம் : குமாரபாளையும்- செங்கப்பள்ளி
14. விக்கிரவாண்டி : திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை
இந்த பகுதிகள் எல்லாம் தமிழகத்தின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக உள்ளது. இந்த பகுதி வழியாக தினமும் அதிக அளவு அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் சென்று வருகின்றன.
தற்போது இந்த விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் அத்தியவாசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம்தான் சென்னையை சுற்றியுள்ள சுமார் 6 சுங்கசாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. தற்போது அடுத்ததாக 14 சுங்க சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை தமிழகம் அதிக சுங்கசாவடி வருமானங்களை பெற்று தரும் மாநிலங்களில் டாப் 5 இடத்தில் உள்ளது. அரசு அளித்த அறிக்கையின் படி தமிழகத்தின் சுங்க சாவடி வருமானம் கடந்த 2 ஆண்டுகளில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
-
பெங்களூருக்கு போறவங்க ஒரு முறையாவது இந்த பஸ்ஸில் டிராவல் பண்ணி பாருங்க!! மொத்தமும் எலக்ட்ரிக்...
-
ஓலா, உபேர் கட்டணம் தரைமட்டத்துக்கு குறைய போகுது! டிரைவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு