Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஆப்பு... அதிகாரிகள் அதிரடியில் வசமா மாட்டிகிட்டாங்க... இதைதான் எதிர்பாத்தோம்!
பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் ஆப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பஸ்கள் மீது பல்வேறு புகார்கள் இருக்கின்றன. விதிமுறைகளை மீறி ஏர் ஹாரன்களை பயன்படுத்துவது மற்றும் அதிக சத்தத்தில் பாடல்களை ஒலிபரப்புவது போன்றவை இதற்கு உதாரணங்கள் ஆகும். இவை பஸ் பயணிகள் மட்டுமல்லாது, சாலையில் பயணம் செய்யும் அனைவருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இதுதவிர பயணிகளுக்கு ஒரு சில கண்டக்டர்கள் டிக்கெட் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. பயணிகளிடம் இருந்து பணத்தை பெற்று கொண்ட பிறகும், டிக்கெட் வழங்காமல் ஒரு சில கண்டக்டர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.
இதுபோல் தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டே இருந்த காரணத்தால் அதிகாரிகள் தற்போது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஏர் ஹாரன்களை பயன்படுத்தியது மற்றும் மிகவும் சத்தமாக பாடல்களை ஒலிபரப்பியது ஆகிய காரணங்களுக்காக தற்போது 104 பஸ்களுக்கு அதிகாரிகள் அதிரடியாக அபராதம் விதித்துள்ளனர்.
ஏர் ஹாரன்களை பயன்படுத்தியதற்காக 60 பஸ்களுக்கும், காதை கிழிக்கும் வகையில் சத்தமாக பாடல்களை ஒலிபரப்பியதற்காக 44 பஸ்களுக்கும் என மொத்தம் 104 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். இந்த 104 பஸ்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 1.22 லட்ச ரூபாயை அதிகாரிகள் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.
இதுதவிர பயணிகளுக்கு டிக்கெட் வழங்காத காரணத்தால் 55 பஸ்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த 3 குற்றச்சாட்டுகள் தவிர பஸ்கள் மீது இன்னும் பல்வேறு புகார்கள் இருக்கின்றன. மிகவும் அபாயகரமான முறையில் பஸ்களை இயக்குவது, மற்ற பஸ்களுடன் போட்டி போட்டு கொண்டு அதிவேகத்தில் செல்வது ஆகியவை இதில் முக்கியமானவை.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் ஒரு சில பஸ்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த விவகாரத்தில் எத்தனை பஸ்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? என்ற விபரம் வெளியாகவில்லை. மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பஸ்களை நிறுத்தாத காரணத்திற்காகவும் அதிரடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு சில பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இவர்கள்தானே என்ற அலட்சியத்தில் பஸ்களை நிறுத்தாமல் செல்கின்றனர். எனவே இந்த தவறை செய்யும் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீதும் தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை அதிகாரிகள்தான் தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனை பெயரளவிற்கு வெறும் ஒரு நாள் மட்டும் மேற்கொள்ளப்பட்டவுடன் நிறுத்தப்படாது எனவும், இந்த சோதனை தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில்தான் இந்த அதிரடி நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் மட்டுமல்லாது, அரசு பஸ்களையும் மோட்டார் வாகன துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்கு பஸ் பயணிகள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கேரளா மட்டுமல்லாது தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மேற்கண்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்களின் போக்குவரத்து துறை அதிகாரிகளும் இந்த விதிமுறை மீறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
வரும் நாட்களில் தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களிலும் பொதுமக்களின் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என நாம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக இலவச பயணம் என்பதால் ஒரு சில அரசு பஸ்களில் பெண் பயணிகளை கண்டக்டர்கள் மரியாதை குறைவாக நடத்துவது வரும் காலங்களில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கப்படும் என நம்பலாம்.
Note: Images used are for representational purpose only.
-
முதியவர்களுக்கு லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்யனும் தெரியுமா? சூப்பர் அட்வைஸ் சொன்ன ரயில்வே!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!