மலேசியாவை கலக்கும் 2.0 வேன்... கெத்து காட்டும் ரஜினி ரசிகர்கள்... இதில் அப்படி என்னதான் இருக்கு?
2.0 வேன் ஒன்று மலேசியாவை கலக்கி கொண்டிருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2.0 வேன் ஒன்று மலேசியாவை கலக்கி கொண்டிருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படம் நாளை (நவம்பர் 29) வெளியாகவுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை 2.0 திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரஜினிகாந்த் வெளியிட்டார். அதன்பின் தமிழக மக்களின் போராட்டங்கள் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களையும் தெரிவித்தார். இதனால் மக்கள் மத்தியில் ரஜினிகாந்த் மீது அதிருப்தி உருவானது.

ஆனால் அந்த அதிருப்திகளை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டு, அனைவரின் மத்தியிலும் 2.0 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிரம்மாண்டமான கட் அவுட் போன்ற பொதுவான விஷயங்கள் தவிர்த்து, ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம், அவரது ரசிகர்கள் வித்தியாசமாக ஏதேனும் ஒன்றை செய்வது வழக்கம். அப்படி இருக்கையில் 2.0 திரைப்படத்தை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட இடங்களில் ரஜினிகாந்த்திற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதில் மலேசியாவை சேர்ந்த ரபீக் டிரான்ஸ்டூர் என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள், வேன் ஒன்றின் முழுவதும், 2.0 திரைப்படத்தின் போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர். மலேசிய வீதிகளில் தற்போது அந்த வேன் கெத்தாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, மலேசிய மக்களும் அந்த வேனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதன் உள்ளே அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வேனை இப்படி டிசைன் செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கபாலி படம் வெளியானபோது, ஏர் ஆசியா நிறுவனம் கபாலி விமானத்தை பறக்க விட்டது நினைவிருக்கலாம். ஏர் ஆசியா நிறுவனம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதாவது விமானம் ஒன்றின் முழுவதுமாக கபாலி படத்தின் போஸ்டர்களை ஒட்டி ஏர் ஆசியா அமர்க்களப்படுத்தியது. திரையுலக வரலாற்றில் சினிமா படத்தின் போஸ்டர் ஒன்று விமானத்தில் இடம்பிடித்தது அதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications